தாயகம் கடந்த தமிழ் மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாயகம் கடந்த தமிழ் மாநாடு என்பது சனவரி 2014 சனவரி 20-22 திகதிகளில் கோவையில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாடு ஆகும்.[1] உலகத் தமிழ் இலக்கியம், தமிழ் மொழியில்/மொழிக் கல்வி, தாயகம் பெயர்தல், மொழிபெயர்ப்பு, தொழில்நுட்பச் சாத்தியக் கூறுகள் என்று பரந்த விடயப் பரப்பில் இந்த மாநாடு அமைந்திருந்தது.

இந்த மாநாட்டினை கோவை தமிழ் பண்பாட்டு மையம் ஒழுங்குசெய்தது. இதில் 10 மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 40 வரையான அறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

அமர்வுகள்[தொகு]

  • தாயகம் கடந்த தமிழ்: ஓர் அறிமுகம்
  • தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும்
  • புதிய சிறகுகள்
  • தொழில் நுட்பம் தரும் வாய்ப்புக்கள்
  • தமிழ் கூறும் ஊடக உலகம்
  • மொழிபெயர்ப்பு: வெளி உலகின் வாயில்
  • தாயகத்திற்கப்பால் தமிழ்க் கல்வி

மேற்கோள்கள்[தொகு]

  1. "தாயகம் கடந்த தமிழ்' - தினமணி

வெளி இணைப்புகள்[தொகு]