தஸ்லிமா நசுரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஸ்லிமா நசுரீன்
தஸ்லிமா நசுரீன் (2010 இல்)
தஸ்லிமா நசுரீன் (2010 இல்)
துணைவர்இல்லை
பிள்ளைகள்இல்லை

தஸ்லிமா நசுரீன் (வங்காள மொழி: তসলিমা নাসরিন, சுவீடிய: Taslima Nasrin பி. ஆகஸ்ட் 25, 1962) வங்காளதேசத்தை சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு திரும்பினார். 2008இல் திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் கூறும் போது நான் ஒரு நாத்திகன், என்னை முஸ்லீம் என்று சொல்லாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.[1] இவர் எழுதிய லஜ்ஜா என்ற புதினம் இவருக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. ஒரு பேட்டியில் இந்தியாவைப் பற்றி இவர் கூறும்போது இந்தியா ஒரு சகிப்பு தன்மையுள்ள நாடு, என்று கூறினார்.[2]

தாக்கங்கள்[தொகு]

பேகம் ரொக்கேயா, சல்மான் ருஷ்டி

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தஸ்லிமா_நசுரீன்&oldid=3816079" இலிருந்து மீள்விக்கப்பட்டது