தருமபுரி அரியரநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தருமபுரி அரியரநாதர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் உள்ள சிவன் கோயிலாகும்.

கோயிலின் வரலாறு[தொகு]

இக்கோயில் மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகும் சோழர் ஆட்சிக்காலத்திலும், அதற்குப்பின் போசளர், விஜயநகரப் பேரரசு காலங்களிலும் இக்கோயில் இராசராசீசுவரமுடையார் கோயில் என அழைக்கப்பட்டுவந்ததைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கோயிலமைப்பு[தொகு]

இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், அம்மன் திருமுற்றம் முன்மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கற்றளி ஆகும். அம்மனான சௌந்தரநாயகி தனிச்சந்னதி இல்லாமல் மகாமண்டபத்தின் வலப்புறத்தில் தெற்கு நோக்கியவாறு திருமுற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் திருச்சுற்றில் தென்மேற்கில் செல்வ விநாயகரும், வடமேற்கில் தண்டாயுதபாணியாக முருகனும் உள்ளனர். [1] இக்கோயிலின் தீர்தமாக கோயிலின் கிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள சனத்குமார ஆறும், தலமரமாக வில்வமும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 177.