தமிழ் நாவலந்தண்பொழில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாவலந்தண்பொழில் என்பது தமிழ்மொழி வழங்கிய நிலத்தைக் குறிக்கும் தொடர்.

இதன் வடக்கு எல்லை குருகொடு பெயர்பெற்ற மால்வரை. குருகு என்பதைக் கிரவுஞ்சம் என வடமொழியாக்கம் செய்து இந்த மலையின் பெயரைக் கிரவுஞ்சமலை எனக் குறிப்பிடுகின்றனர். விந்திய-சாத்பூரா மலைகளையே இவை குறிக்கின்றன. இதனால் தமிழும் அதன் திரிசொல் மொழிகளும் பரிபாடல் காலம் வரையில் வடக்கில் விந்தியமலை வரையில் பேசப்பட்டுவந்தன என்பதைத் தெளிவாக உணரலாம்.

நாவலந்தண்பொழில், வடமொழி பேசும் நாடு ஆகிய இரண்டுக்கும் இடையே இந்த மலை இருந்த்தாம்.[1]

சங்கநூல்களில் வரும் இத்தொடரின் ஆட்சிகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.

நாவலந்தண்மொழில் மன்னர் ஏவல் கேட்ப (பாண்டியன் அரசாண்டான்)[2]
நாவலந்தண்பொழில் ஒற்றர்கள் வஞ்சியில் இருந்தனர் [3],
கிள்ளிவளவனுக்குப் பின்னர் ககந்தன் காகந்திக்கு (காவிரிப்பூம்பட்டினத்துக்கு) அரசனானபோது அவனுக்குப் பகையாயிருந்த நாவலந்தண்பொழில் மன்னர்கள் நடுங்கினர் [4]
மணிமேகலைக்கு ஒப்பார் தமிழகத்தில் இல்லை[5][6]
மாக்கடல் சூழ் நாவலந்தீவு ஆள்வார் [7]
நாவல் ஓங்கிய மாபெருந் தீவில் (புகார் நகரத்தில் இந்திரனுக்குத் தீவகச் சாந்தி விழா கொண்டாடினர் [8]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மாய அவுணர் மருங்கு அறத் தபுத்தவேல், நாவலந்தண்பொழில் வடமொழி ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து, மலையாற்றுப்படுத்த மூவிரு கயந்தலை - பரிபாடல் 5-9
  2. சிலப்பதிகாரம் 17-1-3,
  3. சிலப்பதிகாரம் 25-173
  4. மணிமேகலை 22-29
  5. நாவலந்தீவில் நங்கையை (மணிமேகலையை) ஒப்பார் யாவரும் இல்லை மணிமேகலை 25-12,
  6. நாவலந்தீவில் தான் நனி மிக்கோள் - மணிமேகலை 28-180
  7. ஏலாதி 56-4
  8. மணிமேகலை 2-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_நாவலந்தண்பொழில்&oldid=940034" இலிருந்து மீள்விக்கப்பட்டது