தமிழ் இயங்குபடம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் மொழியில், தமிழ்ச் சூழலில் வெளிவரும் இயங்குபடங்கள் தமிழ் இயங்குபடங்கள் ஆகும். ஜப்பானியர்கள், அமெரிக்கர் போன்று தமிழர்களுக்கு இத்துறையில் நீண்ட வரலாறு இல்லை. தமிழ்த் திரைப்படங்கள் தமிழர் வாழ்வில் ஆரம்பம் முதலே செல்வாக்கான இடத்தை பெற்றிருந்தாலும், வரைகதைகள் 1980 களில் செல்வாக்கு பெற்று இருந்தாலும் தமிழ் இயங்குபடங்களுக்கான முயற்சிகள் தற்போதுதான் மேற்கொள்ளப்படுகின்றன.
இனிமே நாங்கதான் தமிழில் 2007 வெளிவரவிருக்கும் முழுநீள 3-D தமிழ் இயங்குபடம் ஆகும். இந்த இயங்குபடத்தை சென்னையை சேர்ந்த மாயவிம்பம் ஊடக நிறுவனம் வெளியிடுகின்றது. இந்த நிறுவனம் பொன்னியின் செல்வன் கதையையும் இயங்கு படமாக்கவும் திட்டமிட்டுள்ளது.