தமிழ்நாடு மின்னணுவியல் கழகம்
Appearance
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட், ELCOT) தமிழ்நாடு அரசால் இந்திய நிறுவனங்கள் சட்டம்-1956-ன்படி நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். இது தமிழ்நாடு அரசின் தகவல் தொழிலநுட்பத் துறையின் திட்டங்களைச் செயல்படுத்தும் ஒரு முகமை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மின்னணுவியல் நிறுவனங்களை உருவாக்கும் அமைப்பாக சென்னையிலுள்ள நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்தில் 1977 ஆம் ஆண்டில் மார்ச் 21 அன்று பதிவு செய்யப்பட்டு பணிகளைத் தொடங்கியது.