தமிழ்நாடு மருந்தாளுமைக் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் மருந்தாளுமை குறித்த மருத்துவப் படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள் தமிழ்நாடு மருந்தாளுமைக் கல்லூரிகள் எனப்படுகின்றன. இக்கல்லூரிகள் மருந்தாளுமைக் கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கின்றன. இக்கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என இரு வகையாக உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் மதுரையில் என இரண்டு அரசு மருந்தாளுமைக் கல்லூரிகள் உள்ளன. இது தவிர தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 38 சுயநிதிக் கல்லூரிகள் இக்கல்வியை அளிக்கின்றன.