தமிழ்நாடு சர்க்கரைக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் நாடு சக்கரைக் கழகம் வரையறுக்கப்பட்டது
வகைதமிழ்நாடு அரசு நிறுவனம்
நிறுவுகை1974
தலைமையகம்ஆவின் இல்லம் முதல் தளம்,3A பசும்பொன் முத்து ராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை - 600 035, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
தொழில்துறை[சர்க்கரை உற்பத்தி]
இணையத்தளம்[1]

தமிழ் நாடு சர்க்கரைக் கழகம் (Tamil Nadu Sugar Corporation Limited-TASCO) என்பது இந்தியாவில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு சார்பாக செயல்படுகிறது. இது சர்க்கரை, வெல்லம் மற்றும் மின்சார சக்தி உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

வரலாறு[தொகு]

நலிவுற்ற சர்க்கரை ஆலைகளை அரசு எடுத்து நடத்துவதற்காக தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் (TNSCO) 1974 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் நாடு சக்கரைக் கழகத்தின் பணிகள்[தொகு]

தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் கீழ் அறிஞா் அண்ணா சர்க்கரை ஆலை மற்றும் மதுரா சர்க்கரை ஆலை என இரு ஆலைகள் இருந்தன. இதில் மதுரா சர்க்கரை ஆலை மூடப்பட்டுவிட்டது.

மதுரா சர்க்கரை ஆலை[தொகு]

  • அமைவிடம் - பாண்டியராஜபுரம், மதுரை
  • நிலை - கரும்புவரத்து குறைந்ததால் நீண்டகாலமாக மூடப்பட்டது.

அறிஞா் அண்ணா சர்க்கரை ஆலை[தொகு]

  • இடம் - குருங்குளம் மேல்பதி கிராமம், கந்தர்வக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்
  • தொடக்கம் - 1976 - 1977
  • கொள்ளளவு - 2500 டிசிடி
  • இது பொதுத்துறை சர்க்கரை ஆலை ஆகும்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலை[தொகு]

பெரம்பலூர் சர்க்கரை ஆலையானது, தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் துணை நிறுவனம் ஆகும்.

  • இடம் - எறையூர் பெம்பலூர் மாவட்டம்
  • தொடக்கம் - 28-02-1978
  • கொள்ளளவு - 2500 டிசிடி

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]