உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (சுருக்கமாக:தாட்கோ), தமிழ்நாடு அரசின் அமைப்புகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடி மக்களின் வீட்டுவசதி மற்றும் சமூக மேம்பாட்டிற்காகச் செயல்படுகிறது.[1] இக்கழகம் 1974 இல் நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் தாட்கோ பங்கு மூலதனத்தில் பங்களிக்கிறது. தற்போது தாட்கோவின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூபாய்.150.00 கோடி மற்றும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ.128.27 கோடி. மாநில அரசு மற்றும் மத்திய அரசு 51:49 என்ற விகிதத்தில் பங்கு மூலதனத்தை பங்களிக்கிறது.

தாட்கோவின் முக்கிய செயல்பாடுகள்

[தொகு]

அமைப்பு

[தொகு]

தாட்கோ மேலாண்மை இயக்குனரின் தலைமையில் இரண்டு செயல்பாட்டு பிரிவுகள் உள்ளது. மேலும் மாவட்ட அளவில் 38 அலுவலகங்களைக் கொண்டது. இதன் கட்டுமானப் பிரிவு 10 கோட்டங்களை கொண்டது. சென்னை (2 கோட்டங்கள்), விழுப்புரம், வேலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் கோட்ட அலுவலகங்கள் செயல்படுகிறது.[2] Website= https://tahdco.com/tamil/index.php

திட்டங்கள்

[தொகு]

பிரதம அமைச்சர் அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜ்னா (PM-AJAY) திட்டம்

[தொகு]

இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர்களுக்கான வங்கிக் கடன் & மானியத்துடன் கீழ்கண்ட வாழ்வாதாரத் திட்டங்கள் செயல்படுகிறது.

  1. தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
  2. துரித மின் இணைப்பு திட்டம்
  3. நிலம் வாங்கும் திட்டம்
  4. நில மேம்பாட்டுத் திட்டம்
  5. இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (SEPY)
  6. இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம்- சிறப்பு (SEPYC)
  7. சுய உதவி குழுக்களுக்கு பொருளாதார உதவி
  8. விவசாயத்திற்கு மின் மோட்டார் வாங்குதல்
  9. நீர்ப்பாசனத்திற்கான பைப் லைன்களை பொருத்துதல்
  10. திறன் மேம்பாட்டு பயிற்சி

தேசியப் பட்டியல் சமூக நிதி மற்றும் மேம்பாட்டு வாரியம்

[தொகு]

இந்திய தேசியப் பட்டியல் சமூக நிதி மற்றும் மேம்பாட்டு வாரியம், (NSCFDC) பட்டியல் சமூக மேம்பாட்டிற்கு பல திட்டங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள் வழங்குகிறது.[3]அவைகள் பின்வருமாறு:

  1. கல்விக் கடன் திட்டம் (ELS)
  2. பசுமை வணிகத் திட்டம் (GBS)
  3. சிறு விவசாயிகள் திட்டம் (LVY)
  4. சிறு நிதியுதவி கடன் (MCF)
  5. மகளிர் தொழில் முனைவோர் திட்டம் (MSY)
  6. மகளிருக்கு அதிகாரமளித்தல் திட்டம்[4]
  7. மகளிர் துப்பரவு திட்டம் (Swachhta Udyami Yojana (SUY)[5]
  8. குறிப்பிட்ட காலக் கடன் (TL)
  9. தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கடன் திட்டம் (VETLS)

தேசியத் தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்கள்

[தொகு]

தேசியத் தூய்மைப் பணியாளர்களுக்கான நிதியுதவி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(NSKFDC)[6]கீழ் வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள் வழங்கப்படுகிறது.

  1. கல்விக் கடன் திட்டம்
  2. பொது கால கடன்
  3. பசுமை வணிகத் திட்டம் (GBS)
  4. குறு கடன் நிதியுதவி (MCF)
  5. மகளிர் தொழில் முனைவோர் திட்டம் (MSY)
  6. மகளிருக்கு அதிகாரமளித்தல் திட்டம் (MAY)
  7. துப்பரவு பொருட்கள் விற்பனை கடைகள் (சானிட்டரி மார்ட்) (SM)
  8. மகளிர் துப்பரவு திட்டம்

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

[தொகு]

வங்கி கடனுடன் மானியத்துடன் பட்டியல் பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டங்கள்

  1. தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
  2. சுய உதவி குழுக்களுக்கு பொருளாதார உதவி
  3. துரித மின் இணைப்பு திட்டம்
  4. நில மேம்பாட்டுத் திட்டம்
  5. நிலம் வாங்கும் திட்டம்
  6. பழங்குடியின இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்
  7. இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்
  8. மருத்துவம் மற்றும் துணை மருத்துவ நிறுவனங்கள்

இந்திய அரசின் (NSTFDC) திட்டங்கள்

[தொகு]

பட்டியல் பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டங்கள் (குறைந்த வட்டியில் கடன்)

  1. ஆதிவாசி மகிளா சசக்திகரன் யோஜனா (AMSY)
  2. ஆதிவாசி சிஷ்க்ஷா ரின் யோஜனா (ASRY)
  3. குறு கடன் நிதியுதவி (MCS)
  4. பழங்குடி வனவாசிகள் அதிகாரமளிக்கும் திட்டம்
  5. கால கடன்

தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்கள்

[தொகு]

தூய்மைப் பணியாளர்களுக்கு SWWB திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவிகள்:[7]

  1. விபத்துக் காப்பீட்டுத் திட்டம்
  2. இயற்கை மரணத்திற்கு உதவி
  3. இறுதிச் சடங்குகளுக்கு உதவி
  4. உதவித்தொகை
  5. திருமணத்திற்கான உதவி
  6. மகப்பேறு உதவி
  7. கண்ணாடிகளை வாங்குவதற்கு திருப்பிச் செலுத்துவதற்கு
  8. முதியோர் ஓய்வூதியம்

வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் திட்டங்கள்

[தொகு]

தாட்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக சமுதாய கூடங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டுவது தாட்கோ நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இதுவரை தாட்கோ நிறுவனம் கட்டுமானத்திற்கு ரூ.329.11 கோடி மதிப்பில் 432 பணிகளை மேற்கொண்டுள்ளது.[8]

  • இந்திய அரசின் உதவியுடன், ஆதி திராவிடர் விடுதி கட்டிடங்கள், ஏகலைவன் மாதிரி குடியிருப்பு பள்ளி கட்டிடங்கள் (EMRS) கட்டப்படுகிறது.
  • பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா திட்டத்தின் (பிஜேஆர்சிஒய்) கீழ், தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் ரூ.21.80 கோடியில் 13 தங்கும் விடுதி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 275(1)ன் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குமிளி, வேலூர் மாவட்டம் கீழூர், திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டி, நாமக்கல் மாவட்டம் செங்கரை, நீலகிரி மாவட்டத்தில் எம்.பாலடா ஆகிய ஐந்து ஏகலைவன் மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் 60.00 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
  • தமிழ்நாடு மாநில அரசின் திட்டங்களின் கீழ், தரம் உயர்த்தப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் கட்டுதல், விடுதிகள், வளாகச் சுவர், நவீன சமுதாயக் கூடங்கள், விடுதிக் கட்டிடங்களில் சிறப்புப் பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை அரசுக்கு வழங்குதல். கல்ராயன் மலைகளில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் (SBGF) கீழ் பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • நபார்டு திட்டங்களின் கீழ், கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் கட்டுதல், ஆதி திராவிடர் நலம் மற்றும் அரசு பழங்குடியினர் குடியிருப்பு பள்ளிகளுக்கு சுவர், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறைத் தொகுதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய விடுதி கட்டிடங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் நிதியுதவியுடன் 68 கட்டுமானப் பணிகள் ரூ.50.90 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]