கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்பியம் என்பது தலைவனின் வரலாற்றைக் கூறும் இலக்கியம். காப்பியத் தலைவன் ஒருவனையோ, பலரையோ இது கொண்டிருக்கும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பயப்பதாக இருக்கும். செய்யுள் வடிவில் அமைந்திருக்கும். வேறு மொழியிலுள்ள நூலைத் தழுவி உருவாக்கப்பட்ட காப்பியங்களும் தமிழில் உண்டு. சமயம் தழுவிய காப்பியங்கள் தமிழில் மிகுதி.[1]
↑மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 50, 51.