தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும் 2006ஆம் ஆண்டு, தோழமை வெளியீடாக வெளிவந்த தமிழ் நூலாகும். ஓவியர் புகழேந்தி ஈழத்தில் விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் 45 நாட்கள் அங்குத் தங்கி இருந்து அங்கு மாணவர்களுக்கு ஓவியப் பயிலரங்கு நடத்தியும், ஓவியக் கண்காட்சி நடத்தியும், அங்குப் பலரை சந்தித்து புலிகளின் ஆட்சியில் ஈழம் எவ்வாறு இருந்தது என்பதை ஒருபயண நூலாக எழுதி வெளியிடப்பட்டது.

2005இல் அன்றைய தமிழீழமெங்கும் பயணம் செய்து இந்நூலை எழுதியுள்ளார் ஓவியர் புகழேந்தி. இந்த நூல் தமிழ், ஆங்கிலம், பிரஞ்ச், ஜேர்மனி ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]