மணி. மாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழறி மடந்தை கதை (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மணி. மாறன்

த.ம.சரபோஜி என்கிற மணி. மாறன் (Mani.Maaran, பிறப்பு: மார்ச் 23, 1970), தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றிவருகிறார். முதுகலை தமிழ் மற்றும் முதுகலை வரலாறு, நூலக அறிவியல் போன்றவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வரலாறு, கலை, இலக்கியம், வரலாறு மற்றும் சுவடியியல் சார்ந்த துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் இவர், கீழ்க்கண்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். காகித ஆவணங்களில் காணப்படும் செய்திகளை இன்றைய தமிழ் வடிவிற்கு மாற்றித் தரும் பணியைச் செய்துவருகிறார். சிற்றிலக்கிய வகைகளில் அந்தாதி, குறவஞ்சி, சதகம் என்ற வகையில் முறையே அழகரந்தாதி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, அறப்பளீசுர சதகம் என்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

நூல்கள்[தொகு]

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக வெளியீடுகள்[தொகு]

தமிழ் எண்ணும் எழுத்தும் -நூலட்டை
தமிழறி மடந்தை கதை-நூலட்டை
  • தமிழாய்வுக்கட்டுரைகள், 2012
  • அழகர் அந்தாதி (பதிப்பாசிரியர்), 2012
  • சரபேந்திர பூபாலக்குறவஞ்சி (பதிப்பாசிரியர்), 2013[1]
  • அறப்பளீசுர சதகம் (பதிப்பாசிரியர்), 2014
  • அதிவீரராம பாண்டியர் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி(பதிப்பாசிரியர்), 2016
  • தமிழ் மருத்துவ முறைகள் (தலைமைப்பதிப்பாசிரியர்), 2017
  • திருவேங்கட மாலை (பதிப்பாசிரியர்கள் : மணி.மாறன் மற்றும் கோ.ஜெயலெட்சுமி), 2017 [2]

தமிழ் எண்ணும் எழுத்தும்[தொகு]

தமிழ் எண்ணும் எழுத்தும் மணி. மாறன் எழுதிய நூலாகும்[3][4]. ஓலை, சுவடி, ஆவணம், காகிதம் என்ற நிலைகளில் பல்வேறு காலகட்டத்தில் எழுத்தின் வரலாறும், எண்களின் பயன்பாடும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இந்நூலில் எழுத்தின் தோற்றம் தொடங்கி 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழறி மடந்தை கதை[தொகு]

தமிழறி மடந்தை கதை மணி. மாறன் எழுதிய நூலாகும்[5]. ஓர் அரசகுமாரியும், ஓர் அரசகுமாரனும் விரும்பி மணக்க முற்படும்போது விருப்பம் நிறைவேறாமல் இருவரும் இறந்துவிடுகின்றனர். பின்னர் மறுபிறவிக் கதையில் தமிழ்ச்சங்கப் புலவன் நக்கீரன், கரிகாற்சோழ பெருவளத்தான், ஔவைப் பிராட்டியார், பாண்டிய மன்னன் ஆகியோர் பாத்திரப் படைப்புகளாக வருவது இந்நூலில் தரப்பட்டுள்ளது. காப்புடன் தொடங்கும் இந்நூலில் கதையானது, வெண்பா மற்றும் பொருள் என்ற வடிவில் இடம் பெற்றுள்ளது.

பிற பதிப்பகங்கள்[தொகு]

  • மூன்றே எழுத்தில் தமிழ் (வைஷ்மதி பதிப்பகம், தஞ்சாவூர்), 2004
  • முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தமிழியல் துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகம், சென்னை, 600 017) 2015
  • பண்டிதை அசலாம்பிகை அம்மையார், தமிழியல் துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகம், சென்னை, 600 017) 2016
  • தஞ்சையில் சமணம், (முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ. தில்லை கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து) (ஏடகம், தஞ்சாவூர், 2018) [6]

தமிழ்ச்சுவடியியல் பயிலரங்கம்[தொகு]

சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக நடைபெறும் சுவடியியல் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.[7]

கண்டுபிடிப்புகள்[தொகு]

  • சோழர் காலத்து உறை கிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு[8]
  • ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமானுக்கு இப்போதும் சதய விழா தஞ்சை அருகே சிற்றூரில் அதிசயம் தினமலர், 29.4.2014
  • சிதிலமடைந்த சோழர் கால சிவாலயம் புதுப்பிக்கப்படுமா? தினத்தந்தி, 11.3.2014
  • ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் சிலைகள், தினமணி, 1.2.2014
  • தஞ்சாவூர் அருகே சோழர் கால சிலைகள், தினமணி, 10.1.2014
  • சோழர் கால சிற்பம் கண்டெடுப்பு தினமலர், 18.4.2013
  • 9th century sculptures found near Thanjavur, The New Indian Express, 16.4.2013
  • தஞ்சையில் சோழர் கால நந்தி சிற்பம் கண்டெடுப்பு, தினமலர், 31.1.2013
  • ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு தினமலர், 24.1.2013
  • சிதைந்த கோவிலில் சோழர் கால நந்தி சிலை : சங்க கால புலவர் ஊரில் கண்டுபிடிப்பு, தினமலர், 3.9.2012

பெற்ற விருதுகள்[தொகு]

  • இராசராசன் விருது, 2018 (ராஜராஜன் கல்வி அறிக்கட்டளை, தென்னமநாடு, தஞ்சாவூர் மாவட்டம்) [9]

உசாத்துணை[தொகு]

  • 'தமிழ் எண்ணும் எழுத்தும்' நூல், (முதற்பதிப்பு, 2012; வெளியீடு: தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்)
  • 'தமிழறி மடந்தை கதை', நூல், (முதற்பதிப்பு, 2013; தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்)

மேற்கோள்கள்[தொகு]

  1. மணி.மாறன் (20, சனவரி 2014). "சரபேந்திர பூபால குறவஞ்சி". தினமணி. http://www.dinamani.com/book_reviews/2014/01/20/சரபேந்திர-பூபால-குறவஞ்சி/article2008740.ece. பார்த்த நாள்: 7 சனவரி 2015. 
  2. மன்னர் சரபோஜி பிறந்த நாள் ஒன்பது நூல்கள் வெளியீடு, தினமணி, 21 செப்டம்பர் 2017
  3. New Horizon Media தளத்தில் நூல் வெளியீட்டுச்செய்தி[தொடர்பிழந்த இணைப்பு]
  4. தினமணியில் மதிப்புரை
  5. தினமலர் இதழில் நூல் வெளியீட்டுச்செய்தி
  6. Winnews[தொடர்பிழந்த இணைப்பு]
  7. 47 students learn to read Tamil palm leaf manuscripts
  8. "சோழர் காலத்து உறை கிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு". தினமலர். 15, சூலை 2014. http://www.dinamalar.com/news_detail.asp?id=1022220. பார்த்த நாள்: 7 சனவரி 2015. 
  9. தென்னமநாட்டில் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து ராஜராஜன் விருது வழங்கினார், திருச்சி மெயில், தஞ்சாவூர் மாவட்ட செய்திகள், 9 மே 2018

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி._மாறன்&oldid=3223529" இலிருந்து மீள்விக்கப்பட்டது