தமிழர் பழக்கவழக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர்களிடையே பொதுவாக இருக்கும் சில பழக்கவழக்கங்களை பட்டியலிட்டு சிறு விளக்கங்களைத் தர இக்கட்டுரை முனையும்.

கை கூப்பி வணக்கம் செலுத்துதல்[தொகு]

இரு கைகளையும் கூப்பி வணக்கம் செய்தல். இது பிற மனிதரின் வரவை, இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம் ஆகும்.

பெரியோரைப் பெயரிட்டு அழைக்காமை[தொகு]

பெரியவர்களை உறவுப் பெயராலோ அல்லது மரியாதைப் பெயராலோ அழைப்பதே தமிழர் வழக்கம். எடுத்துக்காட்டாக அண்ணா, அக்கா, ஐயா என்று அழைத்தல்.

காலணிகளை வீட்டுக்கு வெளியில் அல்லது வாசலில் விடல்[தொகு]

வெளியில் இருக்கும் மாசுக்களை வீட்டுக்குள் எடுத்து வரமால் இருக்க இந்த ஏற்பாடு உதவியிருக்கலாம். மேற்கத்திய வீடுகளில் இந்த பழக்கம் இல்லை. ஆனால் யப்பானிய பண்பாட்டில் இந்த பண்பாடு இறுக்கமாக பேணப்படுகின்றது.

விருந்தோம்பல்[தொகு]

வீட்டுக்கு வந்தோருக்கு உண்ணவும் பருகவும் உணவும் நீர்பானமும் கொடுத்து உபசரிப்பது தமிழர் பண்பு.

உணர்ச்சி வெளிப்பாடு[தொகு]

மேற்கு நாட்டோருடன் ஒப்பிடும்பொழுது தமிழர்கள் பொதுவாக உணர்ச்சிவயப்பட்டவர்கள். செத்த வீட்டில் ஓவென நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவது இதற்கு ஒர் எடுத்துக்காட்டு.

நேரம்[தொகு]

தமிழர்கள் நேரம் தொடர்பாக இறுகிய கட்டுப்பாட்டை அற்றவர்கள். அதாவது ஒரு நிகழ்ச்சி 6 மணிக்கு என்று அறிவித்தால் அது 6:45 ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது பொதுவாகத் தமிழர்களுக்கிடையே யான நிகழ்வுகளுக்கே.

உரையாடல்[தொகு]

தொடர்பாடல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_பழக்கவழக்கங்கள்&oldid=2910226" இலிருந்து மீள்விக்கப்பட்டது