தமிழர் ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓவியம் ஒரு கவின் கலை. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களை தமிழர் ஓவியம் எனலாம். ஓவியத்தை சித்திரம் என்றும் தமிழில் குறிப்பிடுவர்.

தமிழர் ஓவிய வரலாறு[தொகு]

"தமிழகத்தில் கற்கால குகைகளிலே மிருகங்களை வேட்டையாடுவதையும் வேறுசில குறியீடுகளையும் காணக்கிடைக்கின்றன. சங்க காலத்திலேயே தமிழர்களிடையே ஓவியக் கலை வளர்ச்சி நிலையில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. தமிழர் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் சுவர் ஓவியங்களே. அதாவது சுவரில் எழுதப்பட்ட ஓவியங்கள். மிகச்சில மரப்பலைகளிலும், கிழி (துணிச்சீலை) களிலும் எழுதப்பட்டன." [1]

"இன்றைய பழந்தமிழரின் ஓவியக் கலைக்குப் பேர் சொல்லும் ஓவியங்கள் பனைமலை ஓவியத்தில், காஞ்சி கோயிலில், திருமலைப்புரக் கோயிலில், சித்தண்வாசல் குகையில், தஞ்சை பெரியகோயிலில், மதுரை நாயக்கர் கால மண்டபங்களில் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன" [2]


தமிழர் ஓவியம் பற்றி வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்[தொகு]

[3]

கலைச்சொற்கள்[தொகு]

  • புனையா ஓவியம் - கோட்டினால் வரைந்த வண்ணம் தீட்டப்படாத ஓவியம்
  • புனைந்த ஓவியம் - சித்திரம் - வண்ணங்களினால் புனைந்து அமைத்த ஓவியம்
  • துகிலிகை, தூரிகை - brush
  • 'தொய்யில்'
  • ஓவியர், ஒவமாக்கள், கண்ணுள் வினைஞர்
  • ஓவம், ஓவு
  • புடைப்போவியம் - கல் சிற்பங்களில் புடைத்து செய்யப்படுவன.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 113
  2. மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 119
  3. http://www.geotamil.com/pathivukal/vesa_on_tamilarts.htm தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்! - வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_ஓவியம்&oldid=3510136" இலிருந்து மீள்விக்கப்பட்டது