தமிழச்சியின் கத்தி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழச்சியின் கத்தி
தமிழச்சியின் கத்தி முதற்பக்கம்
நூலாசிரியர்பாரதிதாசன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைகற்பனைக் கவிதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்பாரதிதாசன் பதிப்பகம் மற்றும் பாவை பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
1949 மற்றும் 2009
பக்கங்கள்107
ISBN81-7735-773-5

தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது.

கதைச் சுருக்கம்[தொகு]

அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் வழியாக வருகையில், வளவனூர்ப் புறத்துத் தென்னந் தோப்பொன்றில் திம்மனைக் காணுகிறார்கள் என்று இக்கவிதை தொகுப்பு ஆரம்பமாகிறது.

உசாத்துணைகள்[தொகு]