தமாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமாலம்

தமாலம் என்பது வெற்றிலைக் கொடி. இதனை இக்காலத்தில் தாம்பூலம் என்கிறோம். தக்கோலம் என்பது பாக்கு.[1]

தமாலம் என்பது ஒரு நறுமணமுள்ள கொடி. அது பசுமையான இலைகளைக் கொண்டது. இது ஆர் என்னும் ஆத்தி மரத்தில் ஏறிப் படர்ந்திருந்ததாம். அந்த மரத்தில் இருந்த கொம்புத்தேனை எடுக்க மலைநிலக் குறவன் ஏறினானாம். அப்போது அது சரிந்து விழுந்ததாம். [2]

கோவலன் பிரிந்தபோது மாதவி அவனுக்குக் முடங்கல்(கடிதம்) எழுதி அனுப்பினாள். முடங்கல் தாழைமடலில் எழுதப்பட்டது. அந்த முடங்கலை மலர்கள் பலவற்றின் நடுவில் வைத்து ஒப்பனை செய்த பின் தமாலக் கொடியால் சுற்றி அனுப்பியிருக்கிறாள். [3]

திருப்பதியில் தமாலம் [4]

சோழர் கால வாணிகப் பொருள்களில் ஒன்று தமாலம்.

படம்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு[தொகு]

  1. தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
    பொய்க்கோலம் செய்ய ஒழியுமே – எக்காலும்
    உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
    கண்டுகை விட்ட மயல். - நாலடியார்

  2. நெடுந்தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
    பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்
    தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும். நற்றிணை 292-2

  3. கழுநீர், தமாலம், சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை, மல்லிகை, கத்திகை - சிலப்பதிகாரம் 8-45
  4. செய்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமாலம்&oldid=2430142" இலிருந்து மீள்விக்கப்பட்டது