தன்வினை / பிறவினை வாக்கியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்வினை / பிறவினை வாக்கியங்கள் என்பன முறையே செய் வினை, செய்ப்பாட்டு வினையமைந்த வாக்கியங்களைக் குறிக்கின்றன.[1]


தன்வினை வாக்கியம்[தொகு]

தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது. வினையின் பயன் எழுவாயை சேரும்.

எடுத்துகாட்டு[தொகு]

விமல் உண்டான்.

இவ்வகை வாக்கியத்தில் விமல் என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

பிறவினை வாக்கியம்[தொகு]

ஒரு நபர் ஒரு செயலை பிறரால் அல்லது பிறருக்காக செய்வது.

வினையின் பயன் பிறிதொருவரை அல்லது பிறிதொன்றை அடைதல்

எடுத்துகாட்டு[தொகு]

விமல் உண்பித்தான். இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

  • இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.

தன்வினை - பிறவினை வருந்துவான் - வருத்துவான் திருந்தினான் - திருத்தினான் அடங்கினான் - அடக்கினான்

  • இவ்வாக்கியத்தில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.

தன்வினை - பிறவினை ஆடினான் – ஆட்டினான் மாறுவான் - மாற்றுவான்

  • பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.

நட - நடப்பி - நடப்பித்தான் செய் - செய்வி - செய்வித்தான்

  • சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/a02. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017. {{cite web}}: Missing or empty |title= (help)[தொடர்பிழந்த இணைப்பு]