தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு (கி.பி.1535-1675)
நூல் பெயர்:தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு (கி.பி.1535-1675)
ஆசிரியர்(கள்):குடவாயில் பாலசுப்ரமணியன்
வகை:வரலாறு
துறை:நாயக்கர் வரலாறு
இடம்:தஞ்சாவூர்
மொழி:தமிழ்
பக்கங்கள்:406
பதிப்பகர்:தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம்
பதிப்பு:முதல் பதிப்பு
1999
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். தஞ்சையை ஆண்ட நாயக்கர்களின் [1] வரலாற்றைப் பற்றி இந்நூல் விரிவாக ஆராய்கிறது. தஞ்சையை சோழர்கள் முதல் நூற்றாண்டில் இருந்து 12ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் 90 கோயில்களை கட்டியுள்ளனர். அதன் பின் முத்தரையர்களும், 16ம் நூற்றாண்டில் நாயக்கர்களும்[2], 17,18ம் நூற்றாண்டுகளில் மராத்தியர்களும் ஆட்சி புரிந்த போதிலும் சோழர்களின் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.

அமைப்பு[தொகு]

இந்நூல் 10 தலைப்புகளையும், பின்னிணைப்புகளையும் கொண்டு அமைந்துள்ளது.

தலைப்புகள்[தொகு]

நாயக்கர் அரசு உதயம், முதல் நாயக்க மன்னர், தஞ்சை செவ்வப்ப நாயக்கர், அவரது காலத்துக் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள், அச்சுதப்ப நாயக்கர் - இரகுநாத நாயக்கர் இணைந்த ஆட்சி, இரகுநாத நாயக்கர், இராமபத்ர நாயக்கர், கோவிந்த தீட்சிதர், விஜயராகவ நாயக்கர், தஞ்சை நாயக்கர் காலக் கோட்டையும் அரண்மனையும், தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியின் வரலாற்றுச் சுருக்கம் உள்ளிட்ட தலைப்புகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பின்னிணைப்புகள்[தொகு]

விஜயராகவ நாயக்கரின் கையொப்பத்துடன் காணப்படும் அரிய செப்பேட்டுத்தொகுதி, தஞ்சாவூர் பள்ளிவாசல் கல்வெட்டு, படேவியா வெள்ளிப்பட்டயம், அரித்துவாரமங்கலம் செப்பேடு, மன்னார் மோகனப்பள்ளு, அருவிழி மங்கலம் செப்பேட்டுத் தொகுதி, விஜயராகவ நாயக்கரின் வெள்ளிப்பட்டயம் உள்ளிட்ட பல ஆவணங்கள் பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன.

ஆதாரங்கள்[தொகு]