தஞ்சாவூர் உற்சவ கோடியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உற்சவ கோடியம்மன் கோயில் (வலது)

தஞ்சாவூர் உற்சவ கோடியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் மேலவீதியில் கொங்கனேசுவரர் கோயிலுக்கு சற்று முன்பாக ஓமளிப்பிள்ளையார் கோயில் வளாகத்தினையொட்டி காணப்படுகிறது.

தேவஸ்தான கோயில்[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]

மூலவர்[தொகு]

மூலவர் சன்னதியில் உற்சவரான கோடியம்மன் உள்ளார்.

அமைப்பு[தொகு]

நுழைவாயில், கருவறை, மண்டபம் போன்ற அமைப்புகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. வளாகத்தில் வலது புறம் ஓமளிப்பிள்ளையார் கோயில் உள்ளது. இரு கோயிலுக்கும் தனித் தனி வாயில்கள் உள்ளன. பச்சைக்காளி, பவளக்காளி காணப்படுகின்றன.

மற்றொரு கோடியம்மன் கோயில்[தொகு]

மற்றொரு கோடியம்மன் கோயில் தஞ்சாவூரில் உள்ளது. அக்கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியை அடுத்து அமைந்துள்ளது. அங்கு மூலவராக கோடியம்மன் உள்ளார். அவர் தாரகாசுரனை வதம் செய்து பராசர முனிவரின் கோரிக்கையை ஏற்று அதே கோலத்தில் நின்றபடி சாந்தாகார உருவமாகக் காட்சியளிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 வ.எண்.26
  2. J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur Sl.No.26