தசரத மௌரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசரத மௌரியர்
4வது மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 232 - 224
முன்னையவர்அசோகர்
பின்னையவர்சம்பிரதி
இறப்புகிமு 224
அரசமரபுமௌரியர்
மதம்பௌத்தம்



தசரத மௌரியர் (Dasharatha), (ஆட்சிக் காலம்:கிமு 232–224) அசோகருக்குப் பின் வந்த மௌரியப் பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார்.[1] இவரது ஆட்சிக் காலம் கிமு 232 முதல் 224 முடியவாகும். இவர் அசோகரின் பேரன் ஆவார்.[2] கிமு 224ல் மறைந்த தசரதனுக்குப் பின்னர் அவரது பங்காளி சம்பிரதி பட்டத்திற்கு வந்தார்.

கிமு 265ல் மௌரியப் பேரரசின் வரைபடம், அடர் (ஆரஞ்ச் நிறத்தில்) மற்றும் பேரரசின் கீழ் இருந்த நாடுகள் (இளம் ஆரஞ்ச் சிறத்தில்)

அசோகரின் மறைவிற்குப் பின்னர் மௌரியப் பேரரசை, தசரதன் மற்றும் குணாளன் பிரித்துக் கொண்டனர்.[3] வேறு வரலாற்று குறிப்புகள் தசரதனும் சம்பிரதியும் மௌரியப் பேரரசை பிரித்துக் கொண்டனர் எனக் கூறுகிறது. பேரரசர் தசரதன், பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மௌரியப் பேரரசையும், சம்பிரதி உஜ்ஜைன் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு மற்றும் தெற்கு மௌரியப் பேரரசை ஆண்டனர்.[4]

வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணங்களில் பந்துபாலிதா, இந்திரபாலிதா மற்றும் தசோனா போன்ற மௌரியப் பேரரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது.[5] புராணங்களில் கூறப்படுபவர்கள், தசரத மௌரியன் ஆண்ட மௌரியப் பேரரசின் மாகாணங்களின் ஆளுநர்களாக இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.[5]

அசோகரின் மறைவிற்குப் பின்பு நீண்டகாலமாக மௌரியப் பேரரசில் அரசியல் நிலைத்தன்மை இல்லாது போயிற்று.[5] தசரத மௌரியரின் சித்தாப்பாக்களில் ஒருவரான ஜலௌகா என்பவர், வடமேற்கு மௌரியப் பேரரசின் காஷ்மீர நாட்டை தன்னாட்சியுடன் ஆண்டார்.

வீழ்ச்சி[தொகு]

மௌரியப் பேரரசின் தென் பகுதிகளை, சாதவாகனர்கள் கைப்பற்றினர். கிழக்குப் பகுதிகளை, கலிங்கத்தின் மகாமேகவாகன் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர்.

மகதப் பேரரசின் தலைநகரப் பகுதிகளைத் தவிர, பேரரசின் தொலைதூரங்களில் உள்ள மௌரியப் பகுதிகளை தசரத மௌரியனால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.[6][6]

சமயம்[தொகு]

பௌத்த சமயத்தை பின்பற்றிய தசரத மௌரியர், தற்கால பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில், முக்தம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள பராபர் குகைகளை ஆசிவக முனிவர்களுக்காக அர்பணித்தார்.[7]

வாரிசுகள்[தொகு]

இந்து புராணங்களின் படி, தசரதனுக்குப் பின்னர் சம்பிரதி என்பவரும்,[5] பௌத்தம் மற்றும் சமண சாத்திரங்களின் படி, குணாளன் என்பவரும் மௌரியப் பேரரசராக பட்டத்திற்கு வந்தனர் எனக் கூறுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Asoka Maurya and His Successors
  2. Asha Vishnu; Material Life of Northern India: Based on an Archaeological Study, 3rd Century B.C. to 1st Century B.C. Mittal Publications. 1993. ISBN 978-8170994107. pg 3.
  3. Buddha Prakash; Studies in Indian history and civilization. Shiva Lal Agarwala. 1962. pg 148-154.
  4. Rama Shankar Tripathi; History Of Ancient India. Motilal Banarsidass Publishers. 1942. pg 179.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AI என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. 6.0 6.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; TE என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. Romila Thapar; Aśoka and the Decline of the Maurya. Oxford University Press. 2001. ISBN 0-19-564445-X. pg 186.

வெளி இணைப்புகள்[தொகு]

தசரத மௌரியர்
முன்னர்
அசோகர்
மௌரியப் பேரரசர் பின்னர்
சம்பிரதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசரத_மௌரியர்&oldid=2712129" இருந்து மீள்விக்கப்பட்டது