கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் மூன்று தங்கப் பந்து (பிஃபா) விருதுகளைப் பெற்ற லியோனல் மெஸ்ஸிசூலை,2010-இல் தங்கப் பந்து (பிஃபா) விருதை உருவாக்கியதற்கான ஒப்பந்தத்துடன் ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர். இடம்: ஜோகானஸ்பேர்க்
பிஃபா தங்கப் பந்து (FIFA Ballon d'Or,பிரெஞ்சு உச்சரிப்பு: [balɔ̃dɔʁ], பிஃபா பாலோன் தி'ஓர்) என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிஃபாவினால் வழங்கப்படும் பரிசாகும். பரிசளிக்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் உலகிலேயே மிகச் சிறந்த அளவில் விளையாடிய வீரருக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கென சிறப்பாக ஓட்டெடுப்பு நடைபெறும்; இதில் உலகின் தேசிய அணிகளின் தலைவர்களும், பயிற்சியாளர்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் ஓட்டளிப்பர். [1][2]
பிரெஞ்சுக் கால்பந்தின்பாலோன் தி'ஓர் மற்றும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் ஒன்றிணைத்து 2010-முதல் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒன்றிணைப்புக்குப் பின்னர் முதன்முதலில் இவ்விருதை வென்றவர் லியோனல் மெஸ்ஸி ஆவார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளும் இவரே இவ்விருதைக் கைப்பற்றினார். 2013-க்கான தங்கப் பந்து (பிஃபா) விருதை வென்றவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். 2010-இல் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருதை, பாலோன் தி'ஓருடன் இணைத்த பின்னர், பெண்களுக்கு மட்டும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.