தங்கச்சிமடம்

ஆள்கூறுகள்: 9°17′05″N 79°15′04″E / 9.284728°N 79.25108°E / 9.284728; 79.25108
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கச்சிமடம்
—  இரண்டாம் நிலை ஊராட்சி  —
தங்கச்சிமடம்
இருப்பிடம்: தங்கச்சிமடம்

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 9°17′05″N 79°15′04″E / 9.284728°N 79.25108°E / 9.284728; 79.25108
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
ஊராட்சி தலைவர் ---
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் http://www.thangachimadam.com/

தங்கச்சிமடம் இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தைத் சேர்ந்த ஒரு இரண்டாம் நிலை ஊராட்சியும் ஆகும்[1]. இந்த ஊராட்சியில் வடக்கு, தெற்கு என இரண்டு பக்கமும் கடலோர மீனவக் கிராமங்கள் உள்ளன.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

தங்கச்சிமடம் சாலைப் போக்குவரத்து வசதிகள் நன்கு பெற்ற ஊராகும். மேலும் தங்கச்சிமடம் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதியைப் பெற்றுள்ளது. முன்னர் இங்கே அமைந்திருந்த இரயில் நிலையம்[சான்று தேவை] பின்னர் அகற்றப்பட்டது. தற்போதுள்ள பாம்பன் நிலையம் அருகிலுள்ள ரயில் நிலையமாகும். எனினும், இந்தியாவின் பகுதிகளை இணைக்கும் முக்கிய இரயில்கள் பாம்பனில் நிற்பதில்லை, அவை இராமேசுவரத்தில் மட்டுமே நின்று புறப்படுகின்றன.

ஆன்மிக இடங்கள்[தொகு]

  • பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
  • உச்சயினி மாகாளியம்மன் திருகோவில்
  • முத்துமாரியம்மன் திருக்கோவில்
  • ஏகாந்தரமார் கோவில்[2]
  • பள்ளிவாசல், தங்கச்சிமடம்
  • புனித சந்தியாகப்பர் ஆலயம்

திருவிழாக்கள்[தொகு]

இங்கு ஆண்டுதோறும் பலவிதமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது, முத்துமாரியம்மன் முளைக்கொட்டு உற்சவமாகும். இவ்விழாவானது ஆடி மாதந்தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

அருகிலுள்ள இடங்கள்[தொகு]

இவ்வூரின் அருகில் உள்ள "பேக்கரும்பு" எனும் ஊரில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் சமாதி அமைந்துள்ளது.

பொருளாதாரம்[தொகு]

இவ்வூர் மக்கள் பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள். மீன்பிடித்தொழில் இங்கு முக்கியமான ஒன்றாகும். இப்பகுதியில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் கயிறு திரித்தல் தொழிலில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.[3]. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இங்கு மல்லிகைச் செடிகள் பதியமிடப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்தலும் முக்கியமான தொழிலாக உள்ளது. வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளிகள் மற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.
  2. ராமேஸ்வரம் கோவிலில் ஜோதிலிங்கம் கண்டெடுப்பு, tamil.oneindia.com பெப்ரவரி 10, 2002
  3. "கடலலைகள் தாலாட்டும் தங்கச்சிமடம்". தினகரன். 11 பிப்ரவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305023653/http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=425131&cat=504. பார்த்த நாள்: 6 ஆகத்து 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கச்சிமடம்&oldid=3729485" இலிருந்து மீள்விக்கப்பட்டது