டொக்குபோதனஅள்ளி
டொக்குபோதனஅள்ளி டொக்குபோதனஹள்ளி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636807 |
டொக்குபோதனஅள்ளி (Dokkubodanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் வகைபாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 1465 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 5667 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2763 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2904 என்றும் உள்ளது. மொத்த எழுத்தறிவு விகிதம் 54.4 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.