டேனியல் செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டி. செல்வராஜ் (எழுத்தாளர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டி. செல்வராஜ்
டி.செல்வராஜ்
பிறப்பு(1938-01-14)சனவரி 14, 1938
தென்கலம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
இறப்புதிசம்பர் 20, 2019(2019-12-20) (அகவை 81)
பணிஎழுத்தாளர், வழக்கறிஞர்
அறியப்படுவதுபொதுவுடமைச் சார்பு
வாழ்க்கைத்
துணை
பாரத புத்திரி
பிள்ளைகள்சித்தார்த்தன் பிரபு,
சார்வாகன் பிரபு,
வேத ஞானலெட்சுமி (மகள்)

தானியல் செல்வராசு (டி. செல்வராஜ், சனவரி 14,1938 - திசம்பர் 20 , 2019) ஓர் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். இவர் நெல்லை தென்கலம் சிற்றூரைச் சேர்ந்த[1] செல்வராஜ் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பல்வேறு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ள இவருக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் தோல் என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.[1][2][3] 1975-இல் செம்மலர் எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியபோது அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் .இவர் பொதுவுடமைக்கொள்கையில் பிடிப்புடையவர்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

1938 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் தந்தையார் தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணியாகப் பணியாற்றினார். திருவிதாங்கூர், கொச்சி சமஸ் தான அரசுபள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரம் பயின்றார்.

பொதுவுடைமை இயக்க தொடர்புகள்[தொகு]

கல்லூரிக்காலத்திலேயே நெல்லையில் தோழர்கள் தி. க. சிவசங்கரன்,தொ.மு.சி. இரகுநாதன், பேராசிரியர் நா. வானமாமலை போன்ற இடதுசாரி இலக்கியவாதிகளான தோழர்களுடன் நட்பு ஏற்பட்டது.இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.அப்போது ரகுநாதன் வெளியிட்டு வந்த ‘சாந்தி’ இலக்கிய இதழில் அவருடைய படைப்புகள் வெளியாகின.‘ஜனசக்தி’ வார மலர்களிலும் அவரது கதைகள் வெளியாகின. சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்றார். கல்லூரியில் படிக்கின்ற காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடான ‘ஜனசக்தி’யிலும் இலக்கிய இதழான ‘தாமரை’யிலும் பகுதி நேரமாகப் பணியாற்றினார் .

இலக்கியப் பணிகள்[தொகு]

அவருடைய முதல் நாவலான “மலரும் சருகும்” நெல்லை வட்டாரத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும்,அன்று அம்மக்கள் நடத்திய ‘முத்திரை மரக்கால்’ போராட்டத்தையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட தேநீர் நாவல் அவரது அடுத்த முக்கியமான படைப்பாகும்.ஊமை ஜனங்கள் என்கிற பேரில் அக்கதை திரைப்படமாகவும் வெளிவந்தது.செம்மலரில் தொடராக வந்த “மூலதனம்” நாவல் உலகமயக் காலத்தில் முதலாளித்துவம் பற்றிய படைப்பு. திண்டுக்கல்லில் 40 களில் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடத்தப்பட்ட தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை “தோல்” என்ற நாவலாகப் படைத்தளித்தார்.அதற்கு 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.[4][5][6][7][8][9][10][11]

படைப்புகள்[தொகு]

சிறுகதைகள்[தொகு]

200க்கும் மேற்பட்டசிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை, "நோன்பு" உள்ளிட்ட சில தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

சிறுகதைகளுள் சில:

  1. நோன்பு (ஆண்டாளைப் பற்றியது)
  2. கிணறு
  3. தொண்டன்
  4. தாழம்பூ
  5. ஊர்க்குருவியும் பருந்தும்
  6. பணமும் குலமும்
  7. சுயேச்சை சுந்தரலிங்கம்
  8. அனாதைகள்

புதினங்கள்[தொகு]

6 நாவல்கள் எழுதியுள்ளார்

  1. மலரும் சருகும் (திருநெல்வேலியில் விவசாயிகளின் போராட்டத்தை மையமாகக் கொண்டது).
  2. தேனீர் (தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பின்னணியாகக் கொண்டது) இது திரைப்படமாகவும் வந்துள்ளது.
  3. மூலதனம் (நெருக்கடிநிலைக் காலத்தைப் பின்னணியாகக்கொண்டது)
  4. தோல் (தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக தேர்வு செய்யப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வால் இவருக்குப் பரிசு வழங்கப் பெற்றது.)

ஓரங்க நாடகம்[தொகு]

50 ஓரங்க நாடகம்

வாழ்க்கை வரலாறு[தொகு]

இருவரின் வாழ்க்கை வரலாறு, .

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. 1.0 1.1 "2012 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு". 21 டிசம்பர் 2012. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "திண்டுக்கல் நாவலாசிரியர் செல்வராஜ் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது". தினகரன். 22 டிசம்பர் 2012. Archived from the original on 2012-12-22. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2012-12-21.
  4. Viswanathan, S. (11 August 2007). "Writing for a cause". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107134109/http://www.hindu.com/fline/fl2416/stories/20070824506012000.htm. பார்த்த நாள்: 2010-01-28. 
  5. Viswanathan, S. (22 February 2002). "A trailblazer: T.M. Chidambara Ragunathan, 1923-2001.". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606104223/http://www.hinduonnet.com/fline/fl1903/19031010.htm. பார்த்த நாள்: 2010-01-28. 
  6. Madhusudhanan, The. "D. Selvaraj profile" (in Tamil). www.tamilonline.com இம் மூலத்தில் இருந்து 2011-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110716191644/http://www.tamilonline.com/thendral/print.aspx?id=102&cid=18&aid=1474. பார்த்த நாள்: 2010-01-28. 
  7. Kailasapathy, S.. "Essays on Tamilology" (in Tamil). www.noolaham.net. http://www.noolaham.net/project/04/350/350.htm. பார்த்த நாள்: 2010-01-28. 
  8. Ponnuthurai, S.. "Review of "Vee"" (in Tamil). www.noolaham.net. http://www.noolaham.net/project/01/64/64.htm. பார்த்த நாள்: 2010-01-28. 
  9. "Dalits in today's literature" (in Tamil). Tamil Virtual University. http://www.tamilvu.org/courses/diploma/d071/d0714/html/d0714552.htm. பார்த்த நாள்: 2010-01-28. 
  10. "D. Selvaraj profile at Tamilauthors.com" (in Tamil). www.tamilauthors.com. http://www.tamilauthors.com/writers/india/T.Selvaraj.html. பார்த்த நாள்: 2010-01-28. 
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_செல்வராஜ்&oldid=3729426" இலிருந்து மீள்விக்கப்பட்டது