ஞானேந்திரமோகன் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞானேந்திரமோகன் தாகூர் (Gnanendramohan Tagore) (1826 சனவரி 26 - 1890 சனவரி 5) இவர் 1862ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தில் அழைக்கப்பட்ட முதல் பெங்காலியும், முதல் இந்தியரும் மற்றும் முதல் ஆசியரும்மாவார் . [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஞானேந்திரமோகன் தாகூர் பிரசன்ன குமார் தாகூரின் மகனும், தாகூர் குடும்பத்தின் பாதுரியகட்டா கிளையைச் சேர்ந்த இந்துக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவரான கோபி மோகன் தாகூரின் பேரனும் ஆவார். 1842இல் இவர் மாதத்திற்கு ரூ. 40 உதவித்தொகை பெற்றுக் கொண்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் இவரது மருத்துவக் கல்வியை முடிக்கவில்லை. இந்துக் கல்லூரியின் மாணவராக இருந்தபோது, இராஜ்நாராயணன் போசு மற்றும் கோவிந்த சந்திர தத் (தோரு தத்தின் தந்தை) ஆகியோர் இவரது வகுப்பு தோழர்களாக இருந்தனர். [2]

கிரிஸ்துவத்திற்கு மாறுதல்[தொகு]

இந்துக் கல்லூரி திறக்கப்பட்டபோது, மேற்கத்திய கல்வி இந்து சமுதாயத்தின் கடுமையான கட்டமைப்பை பாதிக்காது என்று இந்து சமூகத்தின் மரபுவழி பிரிவுகள் நினைத்தன. [3] அவர்கள் இராசாராம் மோகன் ராயை அதிலிருந்து விலகி இருக்கும்படி கட்டாயப்படுத்தினர். [4] இருப்பினும், கல்லூரியின் பெயருக்கும் அதன் மதச்சார்பற்ற பாடத்திட்டத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் விரைவில் வெளிப்பட்டன' மற்றும் இந்துக் கல்லூரியின் பல மாணவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர்.

ஞானேந்திரமோகன் 1851ஆம் ஆண்டில் தனது வழிகாட்டியான கிருட்டிண மோகன் பானர்ஜியின் செல்வாக்கின் கீழ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். மேலும் அவரது மகள் கமலமணியை மணந்தார். [5] இதன் விளைவாக, இவர் தனது தந்தையால் விலக்கி வைக்கப்பட்டார் . மேலும் தனது பரம்பரையை இழந்தார். [6] பிரசன்னா குமார் தாகூர் தனது நிலங்களை தனது மருமகன் மகாராஜா பகதூர் சர் ஜதிந்திரமோகன் தாகூக்கு வழங்கி விட்டார். [7] ஞானேந்திரமோகன் பின்னர் நீதிமன்றத்தின் மூலம் சில சொத்துக்களை திரும்பப் பெற்றார்.

பிற்கால வாழ்வு[தொகு]

1859ஆம் ஆண்டில், ஞானேந்திரமோகன் தாகூர் தனது மனைவியுடன் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றார். குணமடைந்த இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இந்து சட்டம் மற்றும் வங்காள மொழிப் பேராசிரியராக சேர்ந்தார். 1861ஆம் ஆண்டில், இவர் கென்சிங்டனில் வசித்து வந்தார். அங்கு இவரை மே 28 அன்று மாணவரும் நாட்காட்டியிலருமான இராகல் தாசு அல்தார் சந்தித்தார். இவர் சட்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். மேலும் 1862 ஆம் ஆண்டில் லிங்கன் வழக்கறிஞர் சங்கத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டார். அவ்வாறு அழைக்கப்பட்ட முதல் ஆசியர் இவராவார். [8] இவர் 1864இல் இந்தியா திரும்பி, 1865 இல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சேர்ந்தார். 1869இல் இவரது மனைவி இறந்த பிறகு, இவர் தனது இரண்டு மகள்களான பபேந்திரபாலா மற்றும் சத்யேந்திரபாலாவுடன் மீண்டும் இங்கிலாந்து சென்றார். பின்னர் அங்கேயே இறந்தார். அவர் பிராம்ப்டன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [9] சத்யேந்திரநாத் தாகூரின் மனைவி ஞானதாநந்தினி தேவி 1877இல் தனது குழந்தைகளுடன் இங்கிலாந்துக்குச் வந்தபோது, ஞானேந்திரமோகன் அவர்களைப் வரவேற்று சிறிது காலம் அவர்களுக்கு ஆதரவளித்தார். [10]

குறிப்புகள்[தொகு]

  1. Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, 1976/1998, (in வங்காள மொழி), p. 184, Sahitya Sansad, ISBN 81-85626-65-0
  2. Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, 1976/1998, (in வங்காள மொழி), p. 184, Sahitya Sansad, ISBN 81-85626-65-0
  3. Raychoudhuri, Subir, The Lost World of the Babus, in Calcutta, the Living City, Vol I, edited by Sukanta Chaudhuri, p. 73, Oxford University Press, ISBN 0-19-563696-1
  4. Collet, Sophia Dobson, The Life and Letters of Raja Rammohun Roy, 1900/1988, p. 76, Sadharan Brahmo Samaj.
  5. Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, 1976/1998, (in வங்காள மொழி), p. 184, Sahitya Sansad, ISBN 81-85626-65-0ISBN 81-85626-65-0
  6. Deb, Chitra, Jorasanko and the Thakur Family, in Calcutta, the Living City, Vol I, edited by Sukanta Chaudhuri, p. 65, Oxford University Press, ISBN 0-19-563696-1
  7. Cotton, H.E.A., Calcutta Old and New, 1909/1980, p. 345, General Printers and Publishers Pvt. Ltd.
  8. Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, 1976/1998, (in வங்காள மொழி), p. 184, Sahitya Sansad, ISBN 81-85626-65-0ISBN 81-85626-65-0
  9. "বাঙালির ১৩০ বছরের ভুলের বোঝা কমল (Bengali)". பார்க்கப்பட்ட நாள் June 27, 2019.
  10. Devi Choudhurani, Indira, Smritisamput, (in வங்காள மொழி), Rabindrabhaban, Viswabharati, pp. 3-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானேந்திரமோகன்_தாகூர்&oldid=3308686" இலிருந்து மீள்விக்கப்பட்டது