ஜோதிர்லதா கிரிஜா
ஜோதிர்லதா கிரிஜா தமிழக எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள், வசன கவிதைகள் எனப் பலதும் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு என்ற ஊரில் 1935 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தை ஒரு பள்ளி ஆசிரியர்.[1] பள்ளிப் பருவத்தில் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனார். இவரது முதல் சிறுகதை 1950 ஆம் ஆண்டில் "ஜிங்லி" என்ற பத்திரிகையில் ரா. கி. ரங்கராஜன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.[1] தொடர்ந்து கல்கண்டு, கண்ணன், பூஞ்சோலை ஆகிய இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன.[1] 1968 இல் ஆனந்த விகடனில் எழுதிய கலப்பு மணம் பற்றிய அரியும் சிவனும் ஒண்ணு என்ற சர்ச்சைக்குரிய குறும்புதினம் வாயிலாக பெரியோர்க்கான எழுத்தாளராக அறியப்பட்டார்.[1] தபால், தந்தி இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
‘நம் நாடு’ எனும் சிறுவர் புதினம் உக்ரைனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.[2]
1975 இல் ஃபெமினாவில் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். இவரது ஆக்கங்கள் டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET இதழில் தொடர்களாக வந்துள்ளன. விம்ன்ஸ் எரா, தி இந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் எழுதியுள்ளார்.[2]
பரிசுகளும் விருதுகளும்[தொகு]
- தினமணி கதிர் நாவல் போட்டியில் பரிசு
- கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டியில் பரிசு
- லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு
- அமுதசுரபி நாவல் போட்டி
- ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது
- திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு
- தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு
- மன்னார்குடி, செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி என்ற சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து பரிசும், விருதும் அளித்தது.
- கம்பன் கழகத்தின் சிவசங்கரி விருது
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 "ஜோதிர்லதா கிரிஜா". அரவிந்த் (தென்றல்). மே 2015. http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10033. பார்த்த நாள்: 6 சூலை 2015.
- ↑ 2.0 2.1 "மணிக்கொடி". திண்ணை. 5 சூலை 2015. http://puthu.thinnai.com/?p=24492. பார்த்த நாள்: 6 சூலை 2015.