ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம், ராஜஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகத்தில் உள்ள கௌரவிக்கும் சுவர்களில் காலன்ட்ரி விருது வென்றவர்களின் பெயர்கள் சந்ததியினரின் பார்வைக்காக பொறிக்கப்பட்டுள்ளன.

ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் ஏ.வி.எஸ்.எம்., வி.எஸ்.எம்., பொது அதிகாரி கமாண்டிங், டெசர்ட் கார்ப்ஸ் பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பாபி மேத்யூஸ்,என்பவரால் சிந்திக்கப்பட்டு, இந்திய ராணுவத்தின் டெசர்ட் கார்ப்ஸ் எனப்படும் பாலைவனப் படைப் பிரிவினரால் கட்டப்பட்டது.

இது ஆகஸ்ட் 24, 2015 ஆம் நாளன்று, அசோக் சிங், பி.வி.எஸ்.எம், ஏ.வி.எஸ்.எம், எஸ்.எம்., வி.எஸ்.எம், ஏ.டி.சி, இந்திய ராணுவத்தின் தெற்கு கட்டளைப் பிரிவுத் தளபதி, பொது அதிகாரி என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட மற்றும் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜே.டபிள்யு.எம் என பிரபலமாக அறியப்பட்ட ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகத்தில், பரம் வீர் சக்ரா மற்றும் மகா வீர் சக்ரா துணி விருது வென்றவர்கள், இரண்டு பெரிய தகவல் காட்சி அரங்குகள் - இந்தியன் ஆர்மி ஹால் மற்றும் லாங்கேவாலா ஹால், ஆடியோ விஷுவல் அறை, ஒரு நினைவு பரிசு கடை மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை. லாங்கேவாலா போரின்போது எதிரி தொட்டி நெடுவரிசைகளை அழித்த இந்திய விமானப்படையின் ஹண்டர் விமானமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1]

ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம் ஜெய்சல்மேர் - ஜோத்பூர் நெடுஞ்சாலையில் ஜெய்சல்மேரிலிருந்து 10 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போரின் பொன் விழாக் கொண்டாட்டத்தின் போது திறந்து வைக்கப்பட்டது.

கருத்துரு[தொகு]

ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகத்திற்கான கருத்துரு இந்தியாவின் வளமான இராணுவ வரலாற்றைக் காண்பிப்பதும், கடந்த காலங்களில் நிகழ்ந்ததை உள்ளது உள்ளபடி காண்பிப்பதும் ஆகும். ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம் பொதுவாக இந்திய இராணுவத்தின் வீரர்களின், குறிப்பாக இந்திய ஆயுதப்படைகளின் வீரர்களின் தியாகத்தைப் பற்றி மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு அமைந்துள்ளது.

கால வரிசை[தொகு]

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மரில் ஒரு போர் அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கான யோசனையை இந்தியாவின் இராணுவ வரலாறு மற்றும் போர்க்கால அனுபவங்களை வெளியுலகிற்குக் கொணரும் எண்ணத்தில் நோக்கில் லெப்டினன்ட் ஜெனரல் பாபி மேத்யூஸ், ஏ.வி.எஸ்.எம், வி.எஸ்.எம்., பொது அதிகாரி கமாண்டிங், கோனார்க் கார்ப்ஸ் முதன்முதலாக முன்வைத்தார். ஜெய்சல்மேர் மாவட்டம் அதன் வளமான தற்காப்பு மரபுகளுக்காகவும், 1971 ஆம் ஆண்டில் அங்கு நடைபெற்ற புகழ்பெற்ற லாங்கேவாலா போர் உள்ளிட்ட பல போர்களுக்கு சாட்சியாகவும் அமைந்த ஊராகும். எனவே அந்த ஊர் இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அருங்காட்சியகப் பணி அமைப்பதற்காக அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளும்போது அவ்விடமானது தட்டையாக, தரிசு நிலமாக இருந்ததை அறியமுடிந்தது. அவ்விடமானது ஜெய்சல்மேர் இராணுவ நிலைய வளாகத்திற்குள் அமைய வேண்டியிருந்தது. பின்னர் லெப்டினன்ட் மேத்யூஸின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய இராணுவத்தின் பாலைவனப் படைப் பிரிவினர் அப்பணியை மேற்கொண்டனர்.

லாங்கேவாலா அரங்கம்[தொகு]

இந்த அரங்கில் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி இரவு நடந்த நிலையில் லாங்கேவாலா போரின் நிகழ்வுகள் உள்ளது உள்ளபடி சித்தரிக்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ-பாக் போரின் போது கிழக்கு மற்றும் மேற்குப் பிரிவுகளில் இந்திய இராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல் ஃபோயரில் 106 எம்எம் ஆர்.சி.எல். துப்பாக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லாங்கேவாலா போரின்போது ஆரம்ப கவசத் தாக்குதலை எதிர்கொண்டு நிறுத்தியதில் அது முக்கியமான பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய ராணுவ அரங்கம்[தொகு]

இந்திய ராணுவ அரங்கம்ம்

இந்திய இராணுவ அரங்கம் எனப்படுகின்ற காட்சிக்கூடத்தில் மண்டபம் 1947-48, 1965 மற்றும் 1999 (கார்கில்) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போர்களை எடுத்துக் காட்டுகிறது. பல்வேறு போர்களின் போது இந்திய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் பல போர்களில் பயன்படுத்தப்பட்ட போர்க் கருவிகளும் இந்த மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தேசிய வளர்ச்சி, பேரிடர் நிவாரணம் மற்றும் சமூக அமைப்புகளுக்கு உதவி என்ற பல நிலைகளில் இந்திய இராணுவத்தினர் ஆற்றி வருகின்றபங்கின் பல்வேறு அம்சங்கள் இந்திய ராணுவ மண்டபத்தில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

புகைப்படத் தொகுப்பு[தொகு]

வரவேற்பு[தொகு]

உள்ளூர் மக்களிடமும், ஊடகங்களிடமும் இந்த அருங்காட்சியகத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த அருங்காட்சியகம் ஆண்டு முழுவதும் காட்சிக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கும். அருங்காட்சியகத்திற்கான நுழைவுக்கட்டணம் எதுவுமில்லை. அங்கு வெளியிடப்படுகின்ற ஓர் ஆவணப் படத்திற்காக சிறிய அளவிலான தொகையை கட்டணமாக வசூலிக்கின்றனர். இந்த அருங்காட்சியக வளாகத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலை உள்ளது. ஊர்திகளை நிறுத்தி வைப்பதற்காக ஒரு பெரிய பார்க்கிங் வசதி உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Desert Corps War Museum at Jaisalmer –... - ADGPI - Indian Army | Facebook". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-12.

வெளி இணைப்புகள்[தொகு]