ஜி. ஏ. நடேசன்
கணபதி அக்ரகாரம் அண்ணாதுரை அய்யர் நடேசன் | |
---|---|
![]() 1933-இல் ஜி. ஏ. நடேசன் | |
பிறப்பு | ஆகத்து 25, 1873 கணபதி அக்ரகாரம், பாபநாசம், தஞ்சாவூர் |
இறப்பு | 29 ஏப்ரல் 1948 | (அகவை 74)
பணி | எழுத்தாளர், இதழாளர், அரசியல்வாதி, நூல் வெளியிட்டாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் |
வாழ்க்கைத் துணை | மங்கலம்மாள் |
கணபதி அக்ரகாரம் அண்ணாதுரை அய்யர் நடேசன் அல்லது ஜி. ஏ. நடேசன் (Ganapathi Agraharam Annadhurai Ayyar Natesan) (25 ஆகஸ்டு 1873 – 29 ஏப்ரல் 1948) சென்னை மாகாணத்தில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர், இதழாளர், அரசியல்வாதி மற்றும் நூல் வெளியிட்டாளர் ஆவார்.
இவர் நிறுவிய ஜி. ஏ. நடேசன் & கோ நூல் வெளியிட்டு நிலையம், இந்திய தேசிய விடுதலை உணர்வுகளை தூண்டும் நூல்களை வெளியிடுவதில் முன்னிலை வகித்தது.
இளமை வாழ்க்கை[தொகு]
ஜி. ஏ. நடேசன் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கணபதி அக்ரகாரம் எனும் கிராமத்தில், அண்ணாதுரை அய்யர் என்பாருக்கு 25 ஆகஸ்டு 1873ல் பிறந்தார்.
பள்ளிப் படிப்பை கும்பகோணத்தில் முடித்தார்.[1] கல்லூரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார்.[2] பின்னர் சொந்தமாக நூல் வெளியிட்டு நிறுவனத்தை துவங்குவதற்கு முன்னர் ஒரு ஆங்கிலேயரின் நூல் வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்றினார். 1897ல் ஜி. ஏ. நடேசன் & கோ (G. A. Natesan & Co) எனும் நூல் வெளியீட்டு நிறுவனத்தை துவக்கினார்.[2][3]
இந்திய விடுதலை இயக்கம்[தொகு]
ஜி. ஏ. நடேசன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். 1900ல் ஆங்கில மொழியில் The Indian Review, எனும் மாத இதழை வெளியிட்டார்.[4] இம்மாத இதழில் இலக்கிய விமர்சனங்கள், விளக்கப் படங்கள், பொருளாதாரம் மற்றும் வேளாண்மை குறித்து செய்திகள் வெளியிட்டார்.[4]
1915ல் முதன் முறையாக மகாத்மா காந்தியடிகள் சென்னைக்கு வருகை புரிந்த போது, ஜார்ஜ் டவுனில் உள்ள தம்பு செட்டித் தெருவில் இருந்த ஜி. ஏ. நடேசனின் இல்லத்தில்,[5][6] 17 ஏப்ரல் முதல் 8 மே 1915 வரை தங்கியிருந்தார்.[6]
பிற்கால வாழ்க்கை[தொகு]
பின்னர் தனது காங்கிரஸ் கட்சி கொள்கையை கைவிட்ட ஜி. ஏ. நடேசன், இந்திய லிபரல் கட்சியில் இணைந்தார்.[7] 1922ல் இந்திய லிபரல் கட்சியின் தேசிய இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 1923 மற்றும் 1931களில் சென்னை மாகாண சட்டமன்றத்தின் நியமன உறுப்பினராக ஜி. ஏ. நடேசன் நியமிக்கப்பட்டார்.[7][8]
இறப்பு[தொகு]
29 ஏப்ரல் 1948ல் ஜி. ஏ. நடேசன் தமது 74வது அகவையில் மறைந்தார்.[1]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 Siba Pada Sen (1972). Dictionary of national biography. Institute of Historical Studies. பக். 245–246. https://archive.org/details/dli.bengal.10689.11619.
- ↑ 2.0 2.1 World biography. Institute for Research in Biography. 1948. https://archive.org/details/dli.csl.6694.
- ↑ Diamond jublee: sixty years of publishing, 1897-1957. G. A. Natesan & Co.. 1957. பக். 39.
- ↑ 4.0 4.1 Somerset Playne; J. W. Bond; Arnold Wright (1914). Southern India: its history, people, commerce, and industrial resources. பக். 733. https://archive.org/details/dli.venugopal.558.
- ↑ "The Mahatma: Gandhi and Kasturba". Gandhi Ahsram at Sabarmati. 6 February 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ 6.0 6.1 "When Gandhi visited Madras". தி இந்து. 26 January 2003. Archived from the original on 20 June 2003. https://web.archive.org/web/20030620060057/http://www.hindu.com/thehindu/mag/2003/01/26/stories/2003012600160200.htm.
- ↑ 7.0 7.1 7.2 Clarence Lewis Barnhart; William Darrach Halsey (1980). New Century Cyclopedia of Names. Simon & Schuster. பக். 2892. ISBN 0136119476, ISBN 978-0-13-611947-0.
- ↑ B. Natesan (1933). Souvenir of the sashtiabdha-poorthi of the Hon. Mr. G. A. Natesan. G. A. Natesan & Co.. பக். 55.