ஜான்சியின் தாமோதர் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமோதர் ராவ் நெவல்கர்
பிறப்புஆனந்த் ராவ்
(1849-11-15)15 நவம்பர் 1849
ஜான்சி மாநிலம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய ஜான்சி, உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு28 மே 1906(1906-05-28) (அகவை 56)
இந்தூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(தற்போதைய இந்தூர், மத்தியப் பிரதேசம், இந்தியா)
பிள்ளைகள்இலட்சுமண ராவ்

தாமோதர் ராவ் (Damodar Rao ) (ஆனந்த் ராவ் என்ற பெயரில் பிறந்தார்) (15 நவம்பர் 1849 - 28 மே 1906) ஜான்சி மாநிலத்தைச் சேர்ந்த கங்காதர் ராவ் மற்றும் ராணி இலட்சுமிபாய் ஆகியோரின் வளர்ப்பு மகனாவார்.

தத்தெடுப்பு[தொகு]

மன்னர் கங்காதர் ராவின் உறவினரான வாசுதேவ் ராவ் நாவல்கருக்கு ஆனந்த் ராவாகப் பிறந்த இவர், தனது சொந்த மகன் இறந்த பிறகு மகாராஜாவால் தத்தெடுக்கப்பட்டார். தாமோதர் ராவ் என்று பெயர் மாற்றப்பட்ட ஆனந்த் ராவின் தத்தெடுப்பு மகாராஜா இறப்பதற்கு முந்தைய நாள் நிகழ்ந்தது. தத்தெடுப்பு பிரித்தானிய அரசியல் அதிகாரி முன்னிலையில் நடந்தது. மகாராஜாவிடம் இருந்து ஒரு கடிதம் வழங்கப்பட்டது. குழந்தையை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், ஜான்சி அரசாங்கம் அவரது விதவைக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நவம்பர் 1853 ல்

அவகாசியிலிக் கொள்கை[தொகு]

மகாராஜாவின் மரணத்திற்குப் பிறகு, தாமோதர் ராவை (பிறப்பு ஆனந்த் ராவ்) வாரிசாக ஏற்றுக்கொள்ளாமல், நவம்பர் 1853ல் இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபுவின் கீழ் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், அவகாசியிலிக் கொள்கை பயன்படுத்தியது. தாமோதர் ராவின் கோரிக்கையை நிராகரித்து, மாநிலத்தை அதன் பிரதேசங்களுடன் இணைத்தது. இது குறித்து அவருக்கு தகவல் கிடைத்ததும், ராணி லட்சுமிபாய் "நான் என் ஜான்சியை சரணடைய விடமாட்டேன்" என்று கூக்குரலிட்டார். கிழக்கிந்திய நிறுவனம் மார்ச் 1854ல், ராணி லட்சுமிபாய்க்கு ஆண்டு ஓய்வூதியமாக ரூ. 60,000 தந்து அரண்மனையையும், கோட்டையை விட்டும் வெளியேற உத்தரவிட்டது. [1] [2]

போர்[தொகு]

இருப்பினும், ஜான்சியில் கலவரக்காரர்களின் நடவடிக்கைகள் மற்றும் ராணி மற்றும் நிறுவனத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றதன் விளைவாக ஜான்சி மாநிலம் அதன் சுதந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. இறுதியில், நிறுவனப் படைகள் ஜான்சி நகரத்தை முற்றுகையிட்டன. உறுதியான எதிர்ப்பின் பின்னர், அவர்கள் கோட்டையைக் கைப்பற்றினர். ராணி லட்சுமிபாய், தாமோதர் ராவ் உடன் தனது குதிரையில், பாதல் கோட்டையிலிருந்து தப்பினார் என்ற ஒரு கதை சொல்லப்படுகிறது. அவர்கள் உயிர் பிழைத்தார்கள், ஆனால் குதிரை இறந்து விட்டது. காவலர்களால் சூழப்பட்ட தனது மகனுடன் இரவில் ராணி தப்பித்திருக்கலாம். [3] [4]

தப்பித்தல்[தொகு]

ஜான்சி கோட்டையில் , தனது குதிரை பாதலுடன் தத்துக் குழந்தையுடன் இராணி இலட்சுமிபாய் தாவிய இடம்

1858ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி ராணி லட்சுமிபாய் இறந்த பிறகு, தாமோதர் ராவ் தப்பித்து, தனது வழிகாட்டிகளுடன் காட்டில், வறுமையில் வாழ்ந்தார். இவர் எழுதிய ஒரு நினைவுக் குறிப்பின் படி, குவாலியர் போரில் தனது தாயின் துருப்புக்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருந்தாகத் தெரிகிறது. பித்தூரைச் சேர்ந்த ராவ் சாகிப் மற்றும் புந்தேல்கண்டின் கிராம மக்கள் ஆங்கிலேயர்களால் பழிவாங்கப்படுவார்கள் என்ற பயத்தில் அவர்களுக்கு உதவ வேண்டி காட்டில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். [5]

சில நம்பிக்கைக்குரியவர்களின் உதவியால் ஜல்ராபத்தானில் தஞ்சம் புகுந்த இவர், ஜலர்பத்தானைச் சேர்ந்த ராஜா பிரதாப்சிங்கைச் சந்தித்தார். நம்பிக்கைக்குரிய, நானேகன் உள்ளூர் பிரித்தானிய அதிகாரியான பிளிங்க் இளம் தாமோதரை மன்னித்தார். ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த பின்னர் இவர் இந்தூருக்கு அனுப்பப்பட்டார். இங்கே, உள்ளூர் அரசியல் முகவரான சர் ரிச்சர்ட் ஷேக்ஸ்பியர், இவருக்கு உருது, ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழியைக் கற்பிப்பதற்காக தர்மநாராயண் என்ற காஷ்மீர் ஆசிரியரை நியமித்தார். இவருக்கு பாதுகாவலாக ஏழு பேருக்கு மட்டுமே வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டது (மற்றவர்கள் அனைவரும் வெளியேற வேண்டியிருந்தது). மேலும் இவருக்கு ஆண்டு ஓய்வூதியமாகம் ரூ. 10,000 வழங்கப்பட்டது. [6]

திருமணம்[தொகு]

பின்னர், இவர் இந்தூரில் குடியேறி திருமணம் செய்து கொண்டார். சில மாத காலத்திலேயே மனைவி இறந்துவிட்டார். இவர் மீண்டும் ஷிவ்ரே குடும்பத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 1904ல் இவருக்கு இலட்சுமண் ராவ் என்ற மகன் பிறந்தார். [6] பின்னர், இந்தியாவில் கம்பெனி ஆட்சி முடிவடைந்த பின்னர், இவர் பிரித்தானிய இராச்சியத்தை அங்கீகரிப்பதற்காக தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயே அரசு இவரை சட்டப்பூர்வ வாரிசாக அங்கீகரிக்க மறுத்துவிட்டது. [7] [8] தாமோதர் ராவ் தீவிர புகைப்பட ஆர்வலராக இருந்தார். இவர் 1906 மே 28 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Edwardes, Michael (1975) Red Year. London: Sphere Books, pp. 113–14
  2. N.B. Rao only means "prince"; the maharaja was Gangadhar Newalkar of the Newalkar clan.
  3. "Jhansi". Remarkable India. Archived from the original on 10 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 October 2012.
  4. Rani of Jhansi, Rebel against will by Rainer Jerosch, published by Aakar Books 2007; chapters 5 and 6
  5. The whole memoir was published in Marathi in Kelkar, Y. N. (1959) Itihasachya Sahali ("Voyages in History").
  6. 6.0 6.1 "The fate of Damodar Rao, the Son of Rani Lakshmi Bai of Jhansi after the war". 23 December 2012.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-10. பார்க்கப்பட்ட நாள் 2020-10-19.
  8. "Jhansi honours its Rani's descendents | Lucknow News - Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்சியின்_தாமோதர்_ராவ்&oldid=3604911" இலிருந்து மீள்விக்கப்பட்டது