ஜனனகருவி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜனனகருவி மாலை [1] என்னும் நூல் இப்போது இல்லை. எனினும் இதன் பாடல்கள் இரண்டு உரையூல் ஒன்றில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. [2] நம் உடலை இந்த நூல் 'ஜனனகருவி' எனக் குறிப்பிடுகிறது. உடலுக்கு ஐம்பூத விகாரத்தால் வரும் அவத்தைகள் இதில் கூறப்பட்டுள்ளன.

பாடல்[தொகு]

உரைநூலில் கிடைத்துள்ள இரண்டு பாடல்களும் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டு இங்குத் தரப்பட்டுள்ளன.

1

அன்னை நுகர்ந்ததன் சாரம் பொழுது மூன்றில்

ஆம் கருவின் இரதம் அதன் மலம் நீர் கிட்டம்

பின் இரதத்து உற்ற மலம் மயிரும் தோலும்

பேசு திறத்து இறைச்சி இதன் மலங்களாம் தசையில்

துன்னி இடும் மேதை மலப் பித்தம் மேதையினில்

சூழ் என்பு மலம் நகம் ஆம் என்பின் மச்சை [3]

மன்னும் மலம் பீளை சுக்கிலத்தை மச்சை

மல நெய்ப்புச் சுக்கிலந்தான் வலி பலம் வாதமுமே

2

நிலம் முதல் ஐந்தும் உடலில் பப்பத்தாக

நிகழ் சூறு வயசு அளவும் அவத்தைகள் பத்து ஆக்கும்

குலவு இளமை வளர்ச்சி எழில் மேதை வலி ஐந்தும்

வளர்த்திடும் முன்னர் ஐம்பான் ஆண்டு அளவில்

நலிய வரும் பின்னை ஐம்பான் யாண்டு அளவில் தாது

நண்ணிய கண் செவி மணம் மூன்றும் போம்படியாத்

கலை உணர்ந்தோர் இஃது அறிந்து ஞான யோகம்

கற்க வரும் காலத்தே கற்று அடைவர் கதியே.
  • "மற்றுக் கூறியன எல்லாம் சனன கருவி மாலையுள் விரித்துக் கூறியன கண்டுகொள்க. ஈண்டு எழுதிற் பெருகும் எனக் காட்டிற்றிலம்" - இவ்வாறு உரையில் கூறப்பட்டுள்ளது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 286. 
  2. வெள்ளியம்பலத் தமிரான் 'ஞானாவரனம்' என்னும் நூலுக்கு எழுதிய உரை
  3. எலும்பும் தசையும் தேயாமல் உரச உதவும் பசை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனனகருவி_மாலை&oldid=1491943" இலிருந்து மீள்விக்கப்பட்டது