ஜசோதரா பக்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜசோதரா பக்சி
பிறப்பு1937
இறப்பு9 சனவரி 2015(2015-01-09) (அகவை 77–78)
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
சோமர்வில் கல்லூரி ஆக்சுபோர்டு
கேம்பிரிட்ஜ், நியூ ஹால்

ஜசோதரா பக்சி (Jasodhara Bagchi) (பிறப்பு: 1937 - இறப்பு: 2015 சனவரி 9 ) கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் ஓர் முன்னணி இந்தியப் பெண்ணிய விமர்சகரும் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். [1]

சுயசரிதை[தொகு]

ஜசோதரா பக்சி 1937 இல் கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் (பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது), ஆக்சுபோர்டு, சோமர்வில் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜின் நியூ ஹால் ஆகியவற்றில் கல்வி பயின்றார். கொல்கத்தாவின் லேடிபிராபோர்ன் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்த பின்னர் ஜசோதரா பக்சி 1964இல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

பக்சி ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையுடன் நீண்ட, பலனளிக்கும், நல்லுறவைக் கொண்டிருந்தார். இவர் தனது அறுபது வயதில் அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் 1983 முதல் இந்தத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1986 முதல்1988 வரை ஆங்கிலத் துறையின் தலைவராக இருந்தார். மேலும் சில முக்கியமான ஆரம்ப ஆண்டுகளில், பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்பு உதவித் திட்டத்தை ஒருங்கிணைத்தார். இது பின்னர் ஆங்கிலத்தில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையமாக மாறியது. பேராசிரியர்கள் சஜ்னி முகர்ஜி மற்றும் இந்த துறையின் இவரது நண்பர்கள் ஆவார்கள்.

பணி[தொகு]

மேலும் இவரது சகாக்கள் 2002 ஆம் ஆண்டில் ஒரு புகழ்பெற்ற சிறந்த எழுத்தான இலக்கியம் மற்றும் பாலினம்: ஜசோதரா பக்சிக்கான கட்டுரைகள் என்பதற்கு உதவினார் . இதற்கு பங்களித்தவர்களில் பாக்சியின் நேசத்துக்குரிய ஆசிரியர்கள், நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சக ஊழியர்களான பீட்டர் ட்ரோன்கே, கிட்டி ஸ்கூலர் தத்தா, ஹிமானி பன்னெர்ஜி, மாலினி பட்டாச்சார்யா, ஷீலா லஹிரி சவுத்ரி, சுப்ரியா சௌத்ரி, தனிகா சர்க்கார், பாஸ்வதி சக்ரவர்த்தி ஆகியோர் அடங்குவர். பேராசிரியர். பக்சி இறக்கும் வரை ஆங்கிலத் துறையில் கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகளில் ஒரு வழக்கமான மற்றும் சுறுசுறுப்பான பங்கேற்பாளராக இருந்தார். மேலும் ஓய்வு பெற்ற பின்னர் சில ஆண்டுகள் அதன் ஆய்வு வாரியத்தில் உறுப்பினராகவும் இருந்தார். ஒரு குறுகிய காலப்பகுதியில், இவர் தனது பணிக்கும் இவரது மாணவர்களுக்கும் அளித்த அர்ப்பணிப்புக்காக அங்கீகாரம் பெற்றார். ஆராய்ச்சி கலாச்சாரத்தை ஊக்குவிப்பது ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறைக்கு இவர் அளித்த மிக முக்கியமான பங்களிப்பாக கருதப்படுகிறது. [2] இவர் பொருளாதார நிபுணர் அமியா குமார் பக்சியை மணந்தார்.

1988ஆம் ஆண்டில் இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் [3] மகளிர் ஆய்வுகள் பள்ளியின்] நிறுவனர் மற்றும் இயக்குநரானார். 199ஆம் ஆண்டில் இவர் ஓய்வு பெறும் வரை மையத்தின் செயல்பாடுகளை வழிநடத்தினார். பெண்களின் பிரச்சினைகளில் ஈடுபடுவதற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக மகளிர் ஆய்வுகள் பள்ளி அங்கீகாரம் பெற்றது. இது பொறியியல் மற்றும் அறிவியல் பீடங்களின் பங்களிப்பைக் கண்டது. அவை பொதுவாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கொல்கத்தாவில் உள்ள சச்செட்டானா என்ற பெண்ணிய அமைப்பின் நிறுவனர் உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

பெண்கள் ஆய்வுகள், பெண்கள் எழுத்துக்கள், 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலம் மற்றும் பெங்காலி இலக்கியங்கள், வங்காளத்தில் நேர்காட்சியியத்தின் வரவேற்பு, தாய்மை மற்றும் இந்தியப் பிரிவினை ஆகியவை இவரின் மையப் பிரிவுகளில் அடங்கும்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வுகள் பள்ளியால் உருவான முன்னோடி பெங்காலி மகளிர் எழுத்தாளர்கள் மறுபதிப்பு தொடரை இவர் தொடங்கினார். மேலும் அதற்கு தலைமையும் தாங்கினார். இது ஜோதிர்மாயி தேவி போன்ற எழுத்தாளர்களின் புதிய பதிப்புகளைத் தொடர்ந்து கொண்டு வருகிறது.

2001 அக்டோபர் முதல் 2008 ஏப்ரல் வரை [4] மேற்கு வங்க மகளிர் ஆணையத்தின்] தலைவராகவும் இருந்தார். [5] ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெண் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவது குறித்து நியாயமான மற்றும் உடனடி விசாரணையை கோரிய ஹாக் கொலரோப் இயக்கம் 2014 ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களுக்கு பக்சி தனது ஆதரவை வழங்கினார்.

மேற்கு வங்க ஆளுநரும் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து, மேலும் "திறமையான" துணைவேந்தரை நியமிக்கக் கோரிய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஓய்வு பெற்ற பேராசிரியர்களின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.

2014ஆம் ஆண்டில், கொல்கத்தா புத்தக கண்காட்சியின் அமைப்பாளர்கள் இவரது இடதுசாரி அரசியல் தொடர்பு காரணமாக, குடியேறிய பெண்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்த இவரது புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்தினர். [6]

ஓய்வு பெற்ற பின்னரும், இவர் இந்தியாவில் பல மாநாடுகளில் கலந்து கொண்டார். மேலும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். [2]

இறப்பு[தொகு]

பக்சி 2015 சனவரி 9 அன்று காலையில் தனது 77ஆவது வயதில் காலமானார். [7] பக்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த புனர்ணாபா, தன்னார்வ அமைப்பான 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் பக்சியின் நினைவாக ஒரு சொற்பொழிவு உட்பட ஒரு ஜசோதரா பக்சி நினைவுத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. [8] திணைக்கள மாணவர்களிடையே தனிப்பட்ட கஷ்டங்கள் ஏற்படும் வழக்குகளுக்கு உதவுவதற்காக ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் பக்சியின் குடும்பத்தினரின் ஆதரவுடன் 2019இல் ஜசோதரா பக்சி நினைவு கஷ்ட நிதி அமைக்கப்பட்டது. [9]

குறிப்புகள்[தொகு]

  1. Jasodhara Bagchi is no more, தி இந்து, 10 January 2015
  2. 2.0 2.1 Chaudhuri, Supriya; Mukherji, Sajni (2002). Literature and Gender: Essays for Jasodhara Bagchi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788125022275. https://books.google.com/?id=SG67on-M658C&printsec=frontcover&dq=jasodhara+bagchi#v=onepage&q=jasodhara%20bagchi&f=false. 
  3. https://web.archive.org/web/20061011142307/http://www.swsju.org/
  4. http://www.wbcw.org
  5. http://www.wbcw.co.in/history/
  6. http://www.thehindu.com/news/cities/kolkata/kolkata-book
  7. http://timesofindia.indiatimes.com/city/kolkata/Jashodhara-Bagchi-passes-away/articleshow/45828419.cms
  8. https://www.facebook.com/pg/Punarnaba-Kolkata-A-Social-Organisation-288718751199357/photos/?tab=album&album_id=1207505909320632
  9. "Abhijit Gupta". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜசோதரா_பக்சி&oldid=2945123" இலிருந்து மீள்விக்கப்பட்டது