ச. வே. சுப்பிரமணியன்
ச. வே. சுப்பிரமணியன் | |
|---|---|
| 2-ஆவது இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | |
| பதவியில் 1972 - 1985 | |
| முன்னையவர் | கா. மீனாட்சிசுந்தரம் |
| பின்னவர் | ஏ. என். பெருமாள் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 31 திசம்பர் 1929 வீரகேரளம்புதூர், பழைய திருநெல்வேலி மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
| இறப்பு | 12 சனவரி 2017 (அகவை 87) திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா |
| இளைப்பாறுமிடம் | தமிழூர் |
| பெற்றோர் | இராமலக்குமி (தாய்) சு. சண்முகவேலாயுதம் (தந்தை) |
| முன்னாள் மாணவர் |
|
| பணி | பேராசிரியர், எழுத்தாளர், தமிழறிஞர் |
ச. வே. சுப்பிரமணியன் (S. V. Subramanian, திசம்பர் 31, 1929 - சனவரி 12, 2017), தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய தமிழ் நிகண்டுகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இளமைப் பருவம்
[தொகு]இவர் திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் இராமலக்குமி - சு. சண்முகவேலாயுதம் ஆகியோருக்குப் பிறந்தவர். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலைத் தொடக்கப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, 1950-53 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பெற்றார்.[1]
பணி
[தொகு]1953-56 காலப்பகுதியில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56 தமிழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றினார்.[1]
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் இதுவரை தமிழில் 54, ஆங்கிலத்தில் 5, மலையாளத்தில் ஒன்று என 60 நூல்களை எழுதியுள்ளார்.[2][3] பல கருத்தரங்குகளிலும் உரையாற்றியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.[1]
நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கினார்.[1]
நூல்கள்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | வகை | பதிப்பகம் |
|---|---|---|---|
| 1964 | இலக்கிய நினைவுகள் | ||
| 1966 | சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம்
(மலையாளம்) |
மொழிபெயர்ப்பு | |
| 1967 | இலக்கணத்தொகை எழுத்து | ||
| 1969 | காந்தி கண்ட மனிதன் | ||
| 1970 | இலக்கணத்தொகை சொல் | ||
| 1972 | இலக்கியக் கனவுகள் | ||
| சிலம்பின் சில பரல்கள் | |||
| Grammar of Akananuru | |||
| 1973 | Studies in Tamil Language and Literature | ||
| 1974 | மாந்தர் சிறப்பு | ||
| மொழிக்கட்டுரைகள் | |||
| 1975 | தமிழில் விடுகதைகள் | ||
| Descriptive Grammar of Chilappathikaram | |||
| 1976 | அடியார்க்கு நல்லார் உரைத்திறன் | ||
| ஒன்று நன்று | |||
| 1977 | சிலம்பும் சிந்தாமணியும் | ||
| வீரசோழியம் குறிப்புரையுடன் | |||
| 1978 | இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் | ||
| இலக்கிய உணர்வுகள் | |||
| கம்பன் கற்பனை | |||
| தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் | |||
| 1979 | காப்பியப் புனைதிறன் | ||
| குவலயானந்தம் சந்திரலோகம் | |||
| 1980 | கூவநூல் | ||
| பிரபந்த தீபம் | |||
| 1981 | கம்பனும் உலகியல் அறிவும் | ||
| 1982 | கம்பன் இலக்கிய உத்திகள் | ||
| பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் | |||
| Studies in Tamilology | |||
| 1984 | இலக்கிய வகையும் வடிவும் | ||
| இளங்கோவின் இலக்கிய உத்திகள் | |||
| திராவிட மொழி இலக்கியங்கள் | |||
| 1986 | இளங்கோவும் கம்பனும் | ||
| 1992 | தொல்காப்பியப் பதிப்புகள் | ||
| நல்வாழ்க்கை | |||
| 1993 | சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் | ||
| தமிழர் வாழ்வில் தாவரம் | |||
| 1995 | மனிதம் | ||
| 1996 | மனமும் உயிரும் | ||
| 1998 | சிலப்பதிகாரம் தெளிவுரை | ||
| தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் | |||
| தொல்காப்பியம் தெளிவுரை | |||
| 1999 | தமிழ் இலக்கிய வரலாறு | ||
| 2001 | சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை | ||
| சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் | |||
| சிலப்பதிகாரம் மூலம் | |||
| திருக்குறள் நயவுரை | |||
| 2002 | கானல்வரி உரை | ||
| சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை | |||
| திருமுருகாற்றுப்படை தெளிவுரை | |||
| பத்துப்பாட்டு உரை | |||
| 2003 | தமிழில் விடுகதைக் களஞ்சியம் | ||
| 2004 | உடல் உள்ளம் உயிர் | ||
| கம்பன் கவித்திறன் | |||
| Tolkappiyam in English | |||
| 2006 | சங்க இலக்கியம் | ||
| மெய்யப்பன் தமிழகராதி | |||
| 2007 | தமிழ் இலக்கண நூல்கள் | ||
| பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | |||
| பன்னிரு திருமுறைகள் |
விருதுகள்
[தொகு]இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசில் உள்ளிட்ட பல பரிசில்களைப் பெற்றுள்ளார். தொல்காப்பியச் செம்மல், கம்பன் விருது, கி. ஆ. பெ. விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் பெற்றுள்ளார்.
மறைவு
[தொகு]4 சனவரி 2017 அன்று சாலையில் நடந்து சென்றபோது வண்டி மோதியதில் காயமடைந்த சுப்பிரமணியன், திருநெல்வேலி மாநகரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் மருத்துவம் பலனின்றி 12 சனவரி அன்று காலை இசீநே 6:00 மணியளவில் காலமானார். அவர் உடல், தமிழூரில் பொதுமக்கள் வணக்கத்துக்காக வைக்கப்பட்டது. தமிழறிஞர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ்ச் சங்கத்தினர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். மறுநாள் இறுதிச் சடங்குகளுக்குப்பின் அவருக்குச் சொந்தமான தோட்டத்திலேயே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.[4]
வாழ்க்கை வரலாறுகள்
[தொகு]இவரது வாழ்க்கை வரலாறு "தமிழ் ஞாயிறு" என்னும் பெயரிலும், "சாதனைச்செம்மல்.ச.வே.சு" என்னும் பெயரிலும் நூலாக வெளிவந்துள்ளது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன், முனைவர் மு. இளங்கோவன்
- ↑ சுப்பிரமணியன், ச.வே, விருபா தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு
- ↑ ExLibris Primo தேடல்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ DIN (2017-01-12). "தமிழறிஞர் ச.வே.சு. காலமானார்". Dinamani. Retrieved 2025-07-02.
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011