ச. பார்த்தசாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ச. பார்த்தசாரதி என்பவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவர் முனைவர் பட்டம் பெற்றவர். இவருடைய தந்தை பெயர் ச. சனார்த்தனம், தாயின் பெயர் கண்ணம்மாள்.

மொழிபெயர்ப்பு[தொகு]

வடமொழியில் காளிதாசர் எழுதிய சாகுந்தலம் என்ற நாடகத்தைத் தமிழில் ச. பார்த்தசாரதி மொழிபெயர்த்துள்ளார். இது திசம்பர் மாதம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்தது. வடமொழியிலுள்ள வெங்கடேச சுப்பிரபாதத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். இதனை இசைக்குயில் எம். எசு. சுப்புலட்சுமி பாடியிருக்கிறார்.

பணி[தொகு]

தமிழ்ப்பேராசிரியராகத் தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் பணிசெய்தவர்.இவர் ஓய்வு பெற்றது மே மாதம் 1999ஆம் ஆண்டு.

பரிசு[தொகு]

காளிதாசரின் சாகுந்தலம் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இவர் எழுதிய நூலுக்குத் தமிழ்நாடு அரசு சிறந்த இலக்கிய நூல் பரிசை 2002 ஆம் ஆண்டு வழங்கியது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆறாம் வகுப்பு,தமிழ். செய்யுள்: தமிழ்நாடு பாடநூல் கழகம். 2007. பக். 38,39. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._பார்த்தசாரதி&oldid=2350265" இலிருந்து மீள்விக்கப்பட்டது