ச. கோபாலாச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சறுக்கை கோபாலாச்சாரி
திருவிதாங்கூரின் திவான்
பதவியில்
16 ஆகத்து 1906 – 26 அக்டோபர் 1907
ஆட்சியாளர்மூலம் திருநாள்
முன்னையவர்வி. பி. மாதவ ராவ்
பின்னவர்பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி

திவான் பகதூர் சறுக்கை கோபாலாச்சாரி(Sarukkai Gopalachari) (பிறப்பு: 1850 ஆகத்து 16) அல்லது கோபாலாச்சார்யார் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும் மற்றும் நிர்வாகியுமாவார். இவர் 1906 ஆகத்து 16 முதல் 1907 அக்டோபர் 26 வரை திருவிதாங்கூரின் திவானாக பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கோபாலாச்சாரி 1850 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் சறுக்கையில் ஒரு வைணவ பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் சட்டத்தில் பட்டம் பெற்று, 1885 மார்ச் 21 இல் துணை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு மதுரையில் வழக்கறிஞராக சிலகாலம் பணியாற்றினார்.[1] 1903 சூனில் இவர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1906 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் திவானாக நியமிக்கப்பட்டபோது கோபாலாச்சாரி திருநெல்வேலியின் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார் .[1]


குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Robin Jeffrey (1976). The decline of Nayar dominance: society and politics in Travancore, 1847-1908. Holmes & Meier Publishers. பக். 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0841901848. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._கோபாலாச்சாரி&oldid=3459586" இலிருந்து மீள்விக்கப்பட்டது