ச. கு. கார்வேந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. கு. கார்வேந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிபழனி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மே 1948 (1948-05-10) (அகவை 75)
தாராபுரம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ச. கு. வெண்மதி
வாழிடம்தாராபுரம்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

ச. கு. கார்வேந்தன் (S.K. Kharventhan, பிறப்பு: 10 மே 1948) இந்திய அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 1998 வரை தமிழ் மாநில காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (பதினோராவது மக்களவை), 2004 முதல் 2009 வரை இந்தியத் தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (பதினான்காவது மக்களவை) இருந்தார்.[1] 14 ஆவது மக்களவையில் விவாதங்களில் சிறப்பாகப் பங்கேற்ற மூவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[2]

வகித்த பதவிகள்[தொகு]

  • தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.
  • அனைத்து இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்தார்.
  • இந்திய சட்டக் கல்வி மேம்பாட்டுக்கு தேசிய விருது பெற்றார்.
  • வழக்கறிஞர் தொழிலில் வாணாள் சாதனை விருது பெற்றார்.

நூலாசிரியராக[தொகு]

சமூக நீதி என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலை தாராபுரம் எஸ் கே கே அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kharventhan,Shri Salarapatty Kuppusamy". Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. S K Kharventhan - a top performer in 14th Lok Sabha
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._கு._கார்வேந்தன்&oldid=3552511" இலிருந்து மீள்விக்கப்பட்டது