சோழவந்தான் வெற்றிலை
| சோழவந்தான் வெற்றிலை | |
|---|---|
| குறிப்பு | தமிழ்நாட்டில் விளையும் வெற்றிலை வகைகளுள் ஒன்று |
| வகை | வெற்றிலை |
| இடம் | மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி |
| நாடு | இந்தியா |
| பதிவுசெய்யப்பட்டது | 31 மார்ச்சு 2023 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | ipindia.gov.in |
சோழவந்தான் வெற்றிலை (Sholavandan Vetrilai) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பயிரிடப்படும் ஒரு முக்கியமான பாரம்பரிய வெற்றிலை வகையாகும். இது மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் ஊராட்சிப் பகுதிகளில் முக்கியமாகப் பயிரிடப்படுகிறது.
புவிசார் குறியீடு பட்டியலின் கீழ் புவிசார் குறியீட்டின் படி இது "சோழவந்தான் வெற்றிலை" என்று குறிப்பிடப்படுகிறது.[1]
பெயர்
[தொகு]சோழவந்தான் வெற்றிலையின் பிறப்பிடமான சோழவந்தான் ஊராட்சி பகுதியின் பெயரால் அழைக்கப்படுகிறது.[2][3]
விளக்கம்
[தொகு]சோழவந்தான், மதுரைக்கு வடமேற்கே 16 மைல் தொலைவில் வைகை ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இது ஒரு வளமான பகுதியாகும்.[4] வெற்றிலையின் நிறம் அவற்றின் காரத்தன்மையைத் தீர்மானிக்கிறது. அடர் நிற இலைகள் அதிகக் காரத்தன்மை கொண்டவை.[5] கி. பி. 5ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனால் கட்டப்பட்ட சோழவந்தானில் உள்ள ஜெயநகர் நாராயண பெருமாள் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு, வெற்றிலை விவசாயிகள் தங்கள் வருமானத்தைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டதை வெளிப்படுத்துகிறது. இது மதுரை பாண்டிய மன்னரிடமிருந்து பெறப்படும் வருவாயினை விட மூன்று மடங்கு அதிகமானது என்பதை உறுதியளிக்கிறது.[6]
புவியியல் குறியீடு
[தொகு]சோழவந்தான் வெற்றிலைக்கு இந்திய அரசின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேட்டில் புவிசார் குறியீடு தகுதி மார்ச் 31, 2023 அன்று வழங்கப்பட்டது. இத்தகுதி 28 அக்டோபர் 2031 வரை செல்லுபடியாகும்.[1]
கிண்டியைச் சேர்ந்த தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியமும், நகரிசாலையைச் சேர்ந்த வெற்றிலைக் கொடிக்கால் விவசாயச் சங்கமும், 'சோழவந்தான் வெற்றிலை'யின் புவிசார் குறியீடு பதிவினை முன்மொழிந்தன. அக்டோபர் 2021-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, 2023ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டுப் பதிவேட்டால் வெற்றிலைக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் "சோழவந்தான் வெற்றிலை" என்ற பெயர் இப்பகுதியில் பயிரிடப்படும் வெற்றிலைக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. இதனால் இது ஆத்தூர் வெற்றிலைக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெறும் இரண்டாவது வெற்றிலை வகையாகவும், தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற 56ஆவது பொருளாகவும் மாறியது.
புவிசார் குறியீட்டு பதிவால் வழங்கப்படும் மதிப்புமிக்க புவியியல் அடையாளம், ஒரு தயாரிப்பு தனித்துவமான குணங்களைக் கொண்டுள்ளது, பாரம்பரிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றுகிறது, அதன் புவியியல் தோற்றத்தில் வேரூன்றிய நற்பெயரைப் பெற்றுள்ளது என்பதைச் சான்றளிக்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Sholavandan Betel Leaf". Intellectual Property India. Retrieved 26 January 2025.
- ↑ "சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம்". The Times of India. 31 October 2021. https://timesofindia.indiatimes.com/tamil/gi-tag-sought-for-sholavandan-betel-leaf/articleshow/87427301.cms.
- ↑ "Betel leaf — much maligned, yet valuable". The Hindu. 4 November 2010. https://www.thehindu.com/sci-tech/Betel-leaf-mdash-much-maligned-yet-valuable/article15675558.ece#:~:text=The%20betel%20leaf%20%E2%80%94%20called%20Tambula,of%20South%20and%20Southeast%20Asia..
- ↑ "GI tag sought for Sholavandan betel leaf". The Times of India. 31 October 2021. https://timesofindia.indiatimes.com/city/madurai/gi-tag-sought-for-sholavandan-betel-leaf/articleshow/87408698.cms.
- ↑ "A toast to Tags". The New Indian Express. 29 March 2024. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2024/Mar/29/a-toast-to-tags.
- ↑ "GI sought for famous Sholavandan betel leaf". The Hindu. 29 October 2021. https://www.thehindu.com/news/national/tamil-nadu/gi-sought-for-famous-sholavandan-betel-leaf/article37229420.ece.