சோட்டானிக்கரை கோவில்

ஆள்கூறுகள்: 9°55′59″N 76°23′28″E / 9.933°N 76.391°E / 9.933; 76.391
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோட்டானிக்கரை கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோட்டாணிக்கரை கோயில்
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயில்
சோட்டாணிக்கரை கோயில் is located in கேரளம்
சோட்டாணிக்கரை கோயில்
சோட்டாணிக்கரை கோயில்
கேரளாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°55′59″N 76°23′28″E / 9.933°N 76.391°E / 9.933; 76.391
பெயர்
பெயர்:சோட்டாணிக்கரை பகவதி கோயில்
தேவநாகரி:.
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு:.
தமிழ்:ஜோதியாகநின்றகரை அம்மன் கோயில்
மராத்தி:.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:எர்ணாகுளம்
அமைவு:சோட்டாணிக்கரை
கோயில் தகவல்கள்
உற்சவர்:பகவதி
இணையதளம்:http://www.chottanikkarabhagavathy.org

சோட்டாணிக்கரை ‎பகவதி கோவில் (ஜோதின்னக்கரை என்ற பெயரின் மழுவல் அதாவது பராசக்தி ஜோதி உருவில் நின்று மும்மூர்த்திகளுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி கொடுத்த இடம்) கேரளத்தில் மிகவும் பெயர் பெற்ற இந்து ‎மதத்தினர் போற்றும் அன்னை இறைவியான பகவதி கோவில் ‎ஆகும். இந்தக் கோவில் தென்னிந்தியாவில் கேரள ‎மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் என்ற இடத்தின் ‎அருகிலுள்ளது. இக்கோவில் சபரிமலை அய்யப்பன் கோவிலைப் ‎போலவே மிகவும் பெயர் பெற்ற கோவிலாகும்.

இந்த இடத்தில் ‎பகவதி வழிபாடு மிகவும் பிரபலமானதாகும், மேலும் அன்னை ‎பகவதியை இறைவன் திருமாலுடன் சேர்த்து "அம்மே நாராயணா" என இந்தக் கோவிலில் ‎பக்தர்கள் வழிபடுகின்றனர் அதாவது நாராயணியும் நானே நாராயணனும் நானே எனப்பொருள், மேலும் அன்னை பகவதி ஒவ்வொரு ‎நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள்: ‎காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ‎ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; மாலையில் சௌபாக்கியம் ‎தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; ‎இரவில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல ‎வண்ண உடையிலும், நண்பகல் உச்சபூஜையிலும் இரவு உச்சபூஜையிலும் மகாகாளியாக காட்சி தந்து பக்தர்களை உய்வித்து அருள்பாலித்து வருகிறாள்.‎[1]

பரிகாரங்களும் நேர்த்திக் கடன்களும்[தொகு]

கோயில் குளம்

பக்தர்கள் மனம் சார்ந்த கோளாறுகள் கொண்ட தமது ‎உறவினர்கள் மற்றும் சார்ந்தோரை, அன்னை பகவதியின் ‎அருளால், குணப்படுத்தும் நோக்குடன் இங்கு வருகை தந்து ‎அன்னையை வழிபடுகின்றனர்.

விழாக்கள்[தொகு]

பார்வதி, லட்சுமி மற்றும் சரஸ்வதி

சோட்டாணிக்கரை கோயிலின் 'கீழ்க்காவில்' நடைபெறும் ‎பூசைகளில் ஒன்றான 'குருதி பூசை'யில் மக்கள் ஆர்வத்துடன் ‎கலந்துகொண்டு, அன்னை பகவதியின் அருளைப் பெறுகின்றனர். ‎இந்தப் பூசை மாலை வேளைகளில் அன்னையின் அருளைப் ‎பெறுவதற்காக நடத்தப்படுகிறது.

முன்பெல்லாம் 'குருதி பூசை' வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே ‎நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம், இந்தப் பூசை ‎ஒவ்வொரு நாளும் இரவு 8மணி முதல் 9மணிக்குள் நடத்தப்படுகிறது.‎

ஆண்டுதோறும் இந்தக்கோவிலில் நடைபெறும் மிகவும் ‎முக்கியமான விழா மகம்தொழல் என்ற பெயரில் மாசிமகம் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. ‎மேலும் நவராத்திரி விழா, சித்திரைவிசு, போன்ற திருவிழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அருகில் உள்ள கோயில்கள்[தொகு]

கீழக்காவில் குருதி

சோற்றானிக்கரை கோவிலுக்கு செல்லும் வழியில் ‎த்ரிப்புணித்துறா என்ற இடத்தில் பூர்ணத்ரயீசர் கோவிலும் ‎குடிகொண்டுள்ளது.

சோற்றானிக்கரை பகவதி கோவிலில் இருந்து சுமார் ‎‎9 கிலோமீட்டர் தொலைவில் த்ரிப்புணித்துறாவில் உள்ள ‎பூர்ணத்ரயீசர் கோவில் குடிகொண்டுள்ளது.‎

போக்குவரத்து வசதிகள்[தொகு]

வானூர்தி நிலையங்கள்[தொகு]

சர்வதேச விமான தளம் எர்ணாகுளம், ‎கொச்சியில் இருந்து ஆலுவாவில் உள்ள நெடும்பச்சேரியில், சுமார் ‎‎22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ‎

தொடருந்து[தொகு]

சோற்றானிக்கரைக்கு மிகவும் அருகிலுள்ள எர்ணாகுளத்தில் பயணிகள் இறங்கவேண்டும், ‎எர்ணாகுளம் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ‎கொச்சியில் இரு இரயில் நிலையங்கள் உள்ளன, அவை ‎எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் நகரம் ஆகும். ‎வடக்கு மற்றும் தென்னிந்தியாவில் இருந்துவரும் இரயில்கள் ‎எர்ணாகுளம் சந்திப்பில் நிற்கும். எர்ணாகுளம் டவுன், வடக்கு பாலம் அருகில்.

பேருந்து[தொகு]

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் சென்றால் பேருந்து நிலையம், எர்ணாகுளம் ‎சந்திப்பின் ரயில்வே நிலையத்தின் அருகில் உள்ளது. ‎அந்நிறுவனம் கேரள மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய ‎நகரங்களுக்கும் விரைவு மற்றும் மிக விரைவு பேருந்துகளை ‎இயக்கி வருகிறது மேலும் அருகாமையில் உள்ள ‎மாநிலங்களுக்கும் பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன. அதே ‎போன்று இதர மாநிலங்கள் வழங்கும் பேருந்து சேவைகளும் ‎கிடைக்கப் பெறுகின்றன. மேலும் தனியார் துறையும் எர்ணாகுளத்தில் இருந்து பல நகரங்களுக்கு ‎செல்வதற்கான பேருந்து சேவைகளை நல்கி வருகின்றது. அவை ‎ஹை கோர்ட் ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் காலூர் ‎ஜங்ஷன் போன்ற இடங்களிலிருந்து இயக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. சோட்டாணிக்கரை பகவதி அம்மன் திருக்கோயில்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோட்டானிக்கரை_கோவில்&oldid=3792634" இலிருந்து மீள்விக்கப்பட்டது