சொல்லின்செல்வர் விருது
தோற்றம்
சொல்லின் செல்வர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்து சிறப்பிக்கப்படுகின்றனர்.
விருது பெற்றவர்கள் பட்டியல்
[தொகு]| வரிசை எண் | விருது பெற்றவர் பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு |
|---|---|---|
| 1 | முனைவர் ம.லோகநாயகி[1] | 2013 |
| 2 | மருத்துவர் சுதா சேசையன் | 2014 |
| 3 | முனைவர் சோ. சத்தியசீலன் | 2015 |
| 4 | பி. மணிகண்டன் | 2016 |
| 5 | முனைவர் வைகைச் செல்வன் | 2017 |
| 6 | ஆவடிக்குமார் | 2018 |
| 7 | சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன் | 2019 |
| 8 | நாகை முகுந்தன் | 2020 |
| 9 | சூர்யா சேவியர் | 2021 |
| 10 | முனைவர் தி. இராசகோபாலன் [2] | 2022 |
| 11 | முனைவர் இ. சா. பர்வீன் சுல்தானா [3],[4] | 2023 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தினமணி நாளிதழ் செய்தி [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கல்". தினமலர். 2024-02-23. Retrieved 2025-01-08.
- ↑ "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
- ↑ "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.
புற இணைப்புகள்
[தொகு]- சொல்லின் செல்வர் விருது பெற்றோர் (தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம்)