சொல்லாட்சி
Jump to navigation
Jump to search
சொல்லாட்சி[தொகு]
ஒரு பொருள் குறித்த பல சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதனைச் சொல்லாட்சி என்பர்.
எடுத்துக்காட்டு[தொகு]
- ஒரு பொருள் - சோறு
- பல சொற்கள் - அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி.
சோறு என்னும் பொருளில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகள்[தொகு]
உண்டி - அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட.......(நாலடியார், 1) கூழ் - கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்.......(புறநானூறு, 70) புழுக்கல் - உப்பிலிப் புழுக்கல் .......(சீவகசிந்தாமணி,2984) பொம்மல் - இறடிப்பொம்மல்பெறுகுவீர்.....(மலைபடுகடாம், 169)[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழ்ப் பாடநூல். தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம். Archived from the original on 2016-04-07. https://web.archive.org/web/20160407001235/http://www.textbooksonline.tn.nic.in/Books/Std08/Std08-III-TamEng.pdf. பார்த்த நாள்: 2017-06-23.