சொரூபராணி நேரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொரூபராணி நேரு
1894இல் சொரூபராணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1868 (1868)
லாகூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு10 சனவரி 1938(1938-01-10) (அகவை 69–70)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மோதிலால் நேரு
உறவுகள்நேரு-காந்தி குடும்பம்
பிள்ளைகள்ஜவகர்லால் நேரு
விஜயலட்சுமி பண்டித்
கிருட்டிணா அதீசிங்

சொரூப ராணி நேரு (Swarup Rani Nehru) (1868   - 10 சனவரி 1938) இவர் வழக்கறிஞரும், இந்திய தேசிய காங்கிரசு தலைவருமான மோதிலால் நேருவின் மனைவியும்,இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் தாயாருமாவார். 1920 - 30 களில் இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் பிரிட்டிசு இராச்சியத்தின் உப்புச் சட்டங்களுக்கு எதிரான ஒத்துழையாமைக்கு ஆதரவாளராக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

காஷ்மீர பண்டிதர் குடும்பத்தில் பிறந்த இவர் பிரிட்டிசு இந்தியாவின் லாகூரிலிருந்து வந்தவர். இவர் மோத்திலால் நேருவை மணந்தார். மோத்திலாலின் முதல் மனைவியும் குழந்தையும் பிரசவத்தில் இறந்த போயினர். இவர்களுக்கு ஜவகர்லால் நேரு, விஜயலட்சுமி மற்றும் கிருட்டிணா என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். முதல் உலகப் போரின்போது, இவர் ஐரோப்பிய மற்றும் இந்திய பெண்களின் குழுக்களுடன் சேர்ந்து படையினருக்கான கம்பளி ஆடைகளை பிணைக்கவும் சேகரிக்கவும் உதவினார். [1]

1920 வரை உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் ஆனந்த் பவன் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய வீட்டில் இவர் ஒரு நீட்டிக்கப்பட்ட குடும்பத்துடன் வசித்து வந்தார். 1920 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த காந்தி, பிரிட்டிசாருக்கெதிரான ஒத்துழையாமை இயக்கமும், தீண்டாமை என்னும் "சமூக தீமைகளுக்கு" எதிரான போராட்டத்தையும் தொடங்கிய போது இவரது வீட்டின் நெறிமுறைகளும் செயல்பாடுகளும் மாற்றப்பட்டன. இவரது கணவரும் மகனும் தங்கள் சட்ட பயிற்சிகளை கைவிட்டனர். இவர் நேரு குடும்பப் பெண்களுடன் கடுமையான சுய ஒழுக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் சேர்ந்தார். 1930 களில், பிரிட்டிசாரின் உப்புச் சட்டங்களை மீறி உப்பு தயாரிப்பதில் இவர் தீவிரமாக இருந்தார். மேலும் ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது காவலர்களால் தாக்கப்பட்டார்.

இவர், ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவரான விஜய லட்சுமி பண்டிட்டின் தாயாரும், இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் பாட்டியும், ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோரின் பெரிய பாட்டியுமாவார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இவரது பெரிய பேரப்பிள்ளைகள். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சொரூப ராணி (முதலில் இடதுபுறம்) மோதிலால் (நிற்பவர்) அவர்களது குழந்தைகளுடன் இங்கிலாந்தில்

சொரூப ராணி நேரு 1868 இல் பிறந்தார், பிரிட்டிசு இந்தியாவின் லாகூரிலிருந்து வந்தவர். [2] இவரது குடும்பம் காஷ்மீர் பிராமண வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர் ஆங்கிலம் புரிந்து கொண்டார். ஆனால் அதை பேசவில்லை.

மோதிலால் நேருவிற்கு தனது சிறு வயதிலேயே இரண்டாவது மனைவியானார். 1889 நவம்பர் 14 ஆம் தேதி, ஜவகர்லால் நேரு என்ற சிறுவன் பிறந்தார். [3] இவர்களது திருமணத்திற்கு சில வருடங்கள் ஆனாலும், இவரது உடல்நிலை மோசமடைந்தது. [4] இவரது வாழ்நாள் முழுவதும், நோய்வாய்ப்பட்டபோது, இவரது மூத்த சகோதரி ராஜவதி இவரை கவனித்துக்கொண்டார். [5]

1920 க்கு முன்னர் குடும்ப வாழ்க்கை அலகாபாத்தின் ஆனந்த் பவன் என்று அழைக்கப்பட்ட மாளிகையில் இருந்தது. இவரது வீட்டில் மின்சாரமும், நீரும் இருந்தது. மேலும் அந்த வளாகத்தில் தொழுவங்கள், நீச்சல் குளம் மற்றும் டென்னிசு மைதானம் ஆகியவை அடங்கும். இவரது கணவரின் பல வழக்குகள் இலண்டனில் வடிவமைக்கப்பட்டன. இவரது மகனின் பொம்மைகள் இங்கிலாந்திலிருந்து வந்தன. இவர்கள் அலகாபாத்தில் கார் வைத்திருந்த குடும்பத்தில் முதன்மையானவர்கள். [3]

ஆகத்து 18, 1900 அன்று, இவர் விஜயலட்சுமி பண்டித் என்று அழைக்கப்படும் சொரூப் குமாரி என்ற மகளை பெற்றெடுத்தார். [3] 1905 நவம்பரில் இவருக்கு ரத்தன் லால் என்ற மகன் பிறந்தார். [6] இருப்பினும், இந்த மகன் குழந்தை பருவத்திலேயே இறந்தார். நவம்பர் 2, 1907 அன்று, இவரது இரண்டாவது மகளும் கடைசி குழந்தையுமான கிருட்டிணா பிறந்தார். [3]

பிற்கால வாழ்வு[தொகு]

நேரு-காந்தி குடும்பப் புகைப்படம், சொரூப ராணி நேரு முதலில் இடதுபுறம் அமர்ந்திருக்கிறார்

மரணம் மற்றும் மரபு[தொகு]

இவர் சனவரி 10, 1938 இல் இறந்தார். [7] இவரது நினைவாக அலகாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Nanda, B. R. The Nehrus Motilal and Jawaharlal (1962). p.126
  2. 2.0 2.1 "The Nehru-Gandhi family tree". Msn.com. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 Tharoor, Shashi Nehru (2003). Chapter 1. "With Little to Commend Me: 1889–1912. p.1-9
  4. Nanda, B. R. The Nehrus Motilal and Jawaharlal (1962). p.24-25
  5. Nanda, B. R. The Nehrus Motilal and Jawaharlal (1962). p.42
  6. Nanda, B. R. The Nehrus Motilal and Jawaharlal (1962). p.76
  7. Tharoor, Shashi Nehru (2003). Chapter 6. "In the Name of God, Go!": 1937–1945. p.112
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொரூபராணி_நேரு&oldid=3600925" இலிருந்து மீள்விக்கப்பட்டது