சைவ சமய சாரம் (நூல்)
சைவ சமய சாரம் என்பது சு சிவபாதசுந்தரம்பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். சைவசமயத்தை அனைவரும் எளிதில் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் வெளியிடப்படுள்ளது. கடவுள், ஆன்மாக்கள், கடவுள் வழிபாடு, நல்வினை தீவினைகள், சைவ வாழ்க்கை, சைவ ஒழுக்கங்கள், சைவத்தின் மகிமை ஆகிய உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபை இந்நூலை பிரசுகம் செய்துள்ளது. [1]