சேலம் மைய சிறைச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேலம் மைய சிறைச்சாலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மைய சிறைச்சாலைகளுள் ஒன்றாகும்.

சிறையின் வரலாறு[தொகு]

சிறைச்சாலை மறு சீரமைவு திட்டம் என்ற பெயரில் சிறைச்சாலை ஒழுங்குமுறை சட்டம் முதன் முதலில் 1835 இல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் படி 1862ம் வருடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மைய சிறைச்சாலை சேலத்தில் கட்டப்பட்டது. இச்சிறைச்சாலை 113.19 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இச்சிறைச்சாலை மொத்தம் 1432 தனி அறைகளைக் கொண்டுள்ளது. இங்கு 700 கைதிகளைச் சிறை வைக்கக்கூடிய இட வசதி உள்ளது. மேலும் ஆங்கிலேயர்கள் தொடர் கைதிகளைச் சிறைவைக்க இச்சிறைச்சாலையைப் பயன்படுத்திக் கொண்டனர். சேலம் மைய சிறைச்சாலை கருப்புகுல்லா சிறை என்றும் ஆலாங்கோட்டை சிறை எனவும் அழைக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_மைய_சிறைச்சாலை&oldid=3246421" இலிருந்து மீள்விக்கப்பட்டது