சேரர் கோட்டை (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேரர் கோட்டை
நூலாசிரியர்கோகுல் சேஷாத்ரி
பட வரைஞர்கோகுல் சேஷாத்ரி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்கமலம் புக்ஸ்
வெளியிடப்பட்ட நாள்
ஜூலை 21, 2012
முன்னைய நூல்இராஜகேசரி

சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்பயிற்று, வர்மக்கலை ஆகியவை குறித்த விவரங்கள் இந்நூலில் கையாளப்பட்டுள்ளன. 2007 முதல் 2010 வரை மாத இணைய இதழான வரலாறு.காம் இதழில் தொடராக வெளிவந்த இக்கதை கமலம் புக்ஸ் பதிப்பகத்தாரால் நூலாக ஜூலை 21, 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

கதைச் சுருக்கம்[தொகு]

தனது மூத்த அண்ணனான ஆதித்த கரிகாலரின் கொலைக்கும் சேர நாட்டில் அமைந்துள்ள காந்தளூர்ச் சாலைக்கும் ஏதோ ஒரு மர்மமான தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் அருள்மொழிவர்மர் (எ) ராஜராஜ சோழன், சாலையை நேரடியாகத் தாக்கத் தயங்குகிறார். ஏனெனில் காந்தளூர்ச் சாலை சேர நாட்டில் மிகவும் மதிக்கப்படும் நான்கு கல்வி கேந்திரங்களுள் ஒன்று. மேலும் பாண்டி நாட்டைக் கடந்து சேர நாட்டை அடைவதும் எளிதான செயலல்ல.

இந்தச் சிக்கலுக்கான விடைதேடி தனது ஆசிரியரான நாகப்பட்டினம் பதர திட்ட விஹாரையின் தலைவரான மஹா காசியப தேரரை தனது சுற்றத்தாருடன் சந்திக்கிறார் அருள்மொழிவர்மர். கேரள அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்த தேரரின் ஆலோசனை மிகவும் நூதனமாக உள்ளது. இப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களான கம்பன் அரையனாரும் பரமன் மழபாடியாரும் எதிர்கொள்ளும் விசித்திரமான விறுவிறுப்பான அனுபவங்களே சேரர் கோட்டையின் கதை. தாங்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை இறுதியில் கண்டறியும் இந்த இரு இளைஞர்கள், தங்களுக்கிடப்பட்ட பணியில் வெற்றிபெற வேண்டுமானால் அதற்காகத் தங்களின் உயிரையே பணயம் வைத்தாக வேண்டும் என்பதையும் அறிந்துகொள்கின்றார்கள்.

கதாபாத்திரங்கள்[தொகு]

இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் இது சரித்திரத்தில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பண்டைய வர்மக்கலை மற்றும் கேரள களரிப்பயிற்று பற்றிய பல நுட்பமான விபரங்களும் சரித்திரத் தரவுகளும் கையாளப்பட்டுள்ளன.

  • ராஜராஜ சோழன் (வரலாற்றுப் பாத்திரம்)
  • ராஜராஜ பல்லவரையர் (வரலாற்றுப் பாத்திரம்)
  • மஹா காசியப தேரர் (புனைவுப் பாத்திரம்)
  • பரமன் மழப்பாடியார் (வரலாற்றுப் பாத்திரம்)
  • கம்பன் மணியன் (எ) விக்கிரம சிங்க மூவேந்த வேளர் (வரலாற்றுப் பாத்திரம்)
  • அமரபுஜங்க தேவர் (வரலாற்றுப் பாத்திரம்)
  • சடைய மாற பாண்டியன் (வரலாற்றுப் பாத்திரம்)
  • அரையன் மானபரணர் (வரலாற்றுப் பாத்திரம்)
  • ரேணுகா தேவி (புனைவுப் பாத்திரம்)
  • திருநாராயண பட்டாதிரி (புனைவுப் பாத்திரம்)
  • வாமனன் நம்பூதிரி (புனைவுப் பாத்திரம்)
  • ரவிதாசன் பஞ்சவன் பிரமாதிராஜன் (வரலாற்றுப் பாத்திரம்)
  • பரமேஸ்வரன் (வரலாற்றுப் பாத்திரம்)

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரர்_கோட்டை_(புதினம்)&oldid=3117152" இலிருந்து மீள்விக்கப்பட்டது