செஹரா (தலைக்கு அணியும் ஆடை)

ஒரு செஹரா'அல்லது செஹ்ரோ அல்லது முண்டவல்யா[1] அல்லது பாசிகம்[2] என்பது இந்திய துணைக்கண்டத்தில் திருமணங்களின் போது மணமகன் (அல்லது சில சமயங்களில் மணமகள் கூட) நெற்றியில் அணியும் ஒரு மாலை/கிரீடம். வங்காளதேசம், இந்தியா மற்றும் பாக்கித்தான் போன்ற நாடுகளில் மணமகன் முகத்தில் தொங்கும் மாலைகளைப் வடிவமைப்பை உள்ளடக்கியும் இருக்கும்.[3] நாட்டின் பிற பகுதிகளை விட வட இந்தியாவில் அவை மிகவும் முக்கியமாக அணியப்படுகின்றன. அவை தீயவர்களின் வார்வையைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையாகவும், மணமகனும், மணமகளும் திருமணத்திற்கு முன்பு ஒருவரையொருவர் பார்க்கக்கூடாது என்பதற்காகவும் இது அணியப்படுகிறது.
பெயர்க் காரணம்
[தொகு]செஹ்ரா என்ற வார்த்தை சமசுகிருத வார்த்தையான "சீர்சாகரா" (शीर्षहार) என்பதிலிருந்து உருவானது.[4] அதாவது தலையை அலங்கரிப்பதற்கான மாலை எனப் பொருள். செஹ்ரா என்ற வார்த்தை இந்து சமய சீர்திருத்தவாதியாதியான சூர்தாசரின் பிராஜ் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]
- ↑ Untracht, Oppi (February 1997). Traditional Jewelry of India (in ஆங்கிலம்). Harry N. Abrams. ISBN 978-0-8109-3886-1.
- ↑ Brown, Charles Philip (1903). "A Telugu-English Dictionary. New ed., thoroughly rev. and brought up to date...2nd ed". dsal.uchicago.edu. Retrieved 2023-03-23.
- ↑ "Sehra: Traditional Headdress For Indian Groom". Utsavpedia. 18 June 2014.
- ↑ 4.0 4.1 Dasa, Syamasundara (1965–1975). "Hindi sabdasagara". dsal.uchicago.edu. Retrieved 2023-03-13.