செழியன் காசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செழியன் காசு

செழியன் காசுகள் என்பது தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டறியப்பட்ட பாண்டியர் காலத்து நாணயங்களாகும்.

இரண்டு காசுகள்[தொகு]

  1. 0.900 கிராம், அகலம் கூடிய பகுதியில் அதன் அளவு 8 மி.மி. அந்த நாணயத்தின் முன்பகுதியில் தமிழ் - பிராமி எழுத்து முறையில் "செழியன்" என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
  2. 6.7 கிராம், அகலம் கூடிய பகுதியில் அதன் அளவு 1.9 மி.மி. அந்த நாணயத்தின் முன்பகுதியில் தமிழ் - பிராமி எழுத்து முறையில் "செழியன்" என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. வேந்தனின் தலை, தலைக்கவசம் அணிந்துள்ளார், கவசத்தின் பின்புறம் அலங்கார அணிகலன்கள், கூர்மையான நாசி, நீண்ட மீசை போன்றவை காசில் தெரிகின்றன. 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில் தலை அருகில் 'செழியன்' என்ற பெயர் தெரிகிறது. பின்புறத்தில் யானை, நீண்ட சதுரத் தொட்டி, அதில் இரண்டு மீன்கள், சுவாசுதிக்காச் சின்னம் போன்றவை உள்ளன. [1]

காலம்[தொகு]

இக்காசுகளில் காணப்படும் செழியன் மற்றும் மாங்குளம் கல்வெட்டுகளில் காணப்படும் செழியன் என்ற இரு சொற்களும் ஒரே கால தமிழ் பிராமி போல் தெரிவதால் இவற்றின் காலத்தை கி. மு. இரண்டாம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கொள்கின்றனர்.

செழிய, செழியன் நாணயங்கள்[தொகு]

செழிய, செழியன் நாணயங்கள் குறித்து டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி 'செழிய, செழியன் நாணயங்கள்' எனும் நூலை எழுதி 2014 ஆகஸ்டு 27 இல் வெளியிட்டுள்ளார்.[2]

மூலம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செழியன்_காசுகள்&oldid=2039717" இலிருந்து மீள்விக்கப்பட்டது