செறுகுன்னப்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செறுகுந்நப்புழா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செறுகுன்னப்புழா மங்களம் ஆற்றின் துணையாறுகளுள் ஒன்று. மங்களம் ஆறு, கேரளாவின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறுகளில் ஒன்றான காயத்ரிப்புழாவின் துணையாறு ஆகும். இவ்வாறு இயற்கை அழகு மிகுந்த இடங்களினூடு ஓடுகின்றது. பாலக்காட்டில் இருந்து சுமார் 48 கிமீ தொலைவில் உள்ளதும், கேரளாவிலுள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதுமாக விளங்கும் மங்கலம் அணை செறுகுன்னப்புழாவின் குறுக்கேயே கட்டப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செறுகுன்னப்புழா&oldid=1693683" இலிருந்து மீள்விக்கப்பட்டது