செருமானியப் பன்னாட்டுப் பள்ளி, சென்னை
செருமானிய பன்னாட்டுப் பள்ளி, சென்னை (German International School Chennai) சென்னையின் புறநகர்ப்பகுதியான பாலவாக்கத்தில் பன்னாட்டு மாணவர்களும் பயிலுமாறு அமைந்துள்ள துவக்கப்பள்ளியும் இடைநிலைப் பள்ளியுமாகும்.[1] இந்தப் பள்ளி 2010ஆம் ஆண்டு சென்னையிலுள்ள செருமானிய கிளைத் தூதரகம் மற்றும் கோத்தே கழகத்தின் துணையுடன் நீலாங்கரையில் நிறுவப்பட்டது. பின்னர் பாலவாக்கத்திற்கு விரிவாக்கப்பட்டு 2014ஆம் ஆண்டிலிருந்து தங்குவிடுதி வசதியையும் அளிக்கத் துவங்கியுள்ளது.[2][3] ஒன்றாவது வகுப்பிலிருந்து எட்டாவது வகுப்பு வரை செருமனியில் பின்பற்றப்படும் துரிங்கிய பாடத்திட்டத்தின்படியும் 9ஆவது, 10ஆவது வகுப்புகளில் பன்னாட்டளவில் பின்பற்றப்படும் பன்னாட்டு இடைநிலைக் கல்விக்கான பொதுச் சான்றிதழ் (IGCSE) பாடதிட்டத்தின்படியும் கல்வி வழங்கப்படுகின்றது.[4] ஆங்கிலம், செருமன் இருமொழிகளில் கல்வி பயில்விக்கப்படுகின்றது.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "Contact Info." German International School Chennai. Retrieved on February 11, 2015. "4/391 Ram Garden Anna Salai Palavakkam Chennai 600 041"
- ↑ "History". German International School Chennai. Archived from the original on 23 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Ramya, M. (24 February 2014). "Boarding facilities inaugurated at German International School in Chennai". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
- ↑ "Welcome". German International School Chennai. Archived from the original on 2015-05-03. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)