செய்யுள் நிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்யுள் நிலம் [1] என்பது செய்யுளாகிய கருத்துப் பயிர் வளரும் நிலம். தொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் ‘செய்யுள்’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். இந்தச் செய்யுளாகிய பயிர் வளரும் நிலங்கள் ஏழு எனக் காட்டுகிறார்.[2] [3]

7 நிலம்[தொகு]

  1. பாட்டு,
  2. உரை,
  3. நூல்,
  4. வாய்மொழி
  5. பிசி,
  6. அங்கதம்
  7. முதுசொல் முதுமொழி, முதுமொழிக்காஞ்சி போன்ற பழமொழி

வேறுவகை[தொகு]

  1. மந்திரம்,
  2. பண்ணத்தி

என்பன.

இவற்றுள் பாட்டு, உரை, நூல் என்னும் முதல் மூன்றும் மொழியமைதிப் பாகுபாடுகள். ஏனைய நான்கும் செய்யுளில் அமைந்துள்ள பொருளமைதிப் பாகுபாடுகள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. செய் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். நன்செய், புன்செய் என்னும் சொற்களில் இப் பொருள் தோன்றுவதைக் காணலாம்.
  2. பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
    அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
    வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
    நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
    யாப்பின் வழியது என்மனார் புலவர். தொல்காப்பியம் செய்யுளியல் 75
  3. எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
    அடி வரை இல்லன ஆறு என மொழிபதொல்காப்பியம் செய்யுளியல் 157.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யுள்_நிலம்&oldid=2951917" இலிருந்து மீள்விக்கப்பட்டது