சென்னையில் திருவையாறு
| சென்னையில் திருவையாறு | |
|---|---|
| வகை | இந்திய இசை விழா |
| நாள் | 8 நாட்கள் |
| அமைவிடம்(கள்) | காமராசர் அரங்கம், சென்னை |
| இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 2005–முதல் |
சென்னையில் திருவையாறு (Chennaiyil Thiruvaiyaru) என்பது 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் ஓர் இசை விழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 18 முதல் 25 வரை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கத்தில் நடைபெறும் எட்டு நாள் கருநாடக இசை விழாவாகும். விழா நடைபெறும் வாரம் முழுவதும் நடைபெறும் நிகழ்வில், கருநாடக, இந்துசுதானி இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.[1]
வரலாறு
[தொகு]2005ஆம் ஆண்டில், சென்னையில் திருவையாறு என்ற பெயரில் சென்னையில் இந்தியப் பாரம்பரிய இசை விழாவிற்கான ஒரு தளத்தை இலட்சுமண் சுருதி விளம்பரப்படுத்தினார். இந்த விழா, புதிய கலைஞர்கள், புதிய திறமையாளர்கள் தங்கள் இசைத் திறன்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.
விழா
[தொகு]ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். மேலும் இது சுமார் 8 நாட்கள் நடைபெறுகிறது. கருநாடக இசையின் முன்னணி வல்லுநர்கள் சிறந்த இசையமைப்பாளர்கள் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தவும், நிகழ்ச்சிகளை நடத்தவும் முன் வருகிறார்கள். இதை ஆயிரக்கணக்கான பாரம்பரிய இசை இரசிகர்கள் கண்டு களிப்பார்கள்.
இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 'பாரத ரத்னா' ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், பத்ம பூசண் கமல்ஹாசன் போன்ற ஆளுமைகளால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 500+ கலைஞர்கள் பங்கேற்று நித்திய பஞ்சரத்ன கிருதியை ஒரே குரலில் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு, திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தின் பிரதியாக மேடை ஏற்பாடு செய்யப்படுகிறது. கீர்த்திகளின் அச்சிடப்பட்ட பிரதிகள் பார்வையாளர்களின் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படும், அவர்கள் குழுப்பாடலின் போது சேரலாம்.
சென்னையில் உள்ள இசை நிகழ்ச்சி அமைப்பாளர்களான இலட்சுமண் சுருதி இந்த நிகழ்வை நடத்துகின்றனர்.
உணவுத் திருவிழா
[தொகு]இதே வளாகத்தில் இசை விழாவுடன் உணவுத் திருவிழாவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த உணவுத் திருவிழாவில் புதுமையான, கருத்து சார்ந்த உணவுக் கடைகள், அயல்நாட்டு உணவு வகைகள், போட்டிகள், காய்கறி செதுக்குதல், பனி செதுக்குதல், கரிம, உயிரி உணவுக் கடைகள், முன்னணிச் சமையல்காரர்களின் சமையல் கண்காட்சிகள் ஆகியவை அடங்கும்.[2]
அங்கீகாரமும் பங்களிப்புகளும்
[தொகு]- இசையாழ்வார்: சென்னையில் திருவையாறு, 2014 முதல் கர்நாடக இசைத் துறையில் பங்களித்தவர்களை அங்கீகரித்து "இசையாழ்வார்" என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்து வருகிறது. 2014ஆம் ஆண்டில், சென்னையில் திருவையாற்றிலிருந்து இசையாழ்வார் விருதைப் பெற்ற முதல் நபர் திருவிழா ஜெயசங்கர் ஆவார்.
- 2015ஆம் ஆண்டில், வயலின் வித்துவான் பத்மசிறீ அ. கன்னியாகுமாரிக்கு, வாழ்நாள் சாதனை மற்றும் பாரம்பரிய இசைக்கான பங்களிப்புக்காக பி. சுசீலா அவர்களால் இசையாழ்வார் பட்டமும், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.
மேலும் காண்க
[தொகு]- இந்திய பாரம்பரிய இசை விழாக்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சென்னையில் திருவையாறு: டிச.18-25 வரை முழு நிகழ்ச்சி விவரம்". Hindu Tamil Thisai. 2025-02-21. Retrieved 2025-02-21.
- ↑ https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/Dec/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3050962.html
