செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
உருவாக்கம் | 1974 |
---|---|
வகை | அரசு |
நோக்கம் | அகரமுதலிகளை உருவாக்குவதுடன், கலைச்சொற்கள் உருவாக்கும் பணி |
தலைமையகம் | சென்னை |
தலைமையகம் |
|
சேவை பகுதி | தமிழ்நாடு |
அமைச்சர் | தங்கம் தென்னரசு |
செயலாளர் | முனைவர் ம. சு. சண்முகம் இ.ஆ.ப [1] |
இயக்குநர் | முனைவர் கோ. விசயராகவன் |
வலைத்தளம் | www |
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் மொழியின் சொல்வளத்தையும், காலப்பழமையையும், தனித்தன்மையையும் வெளிக் கொண்டு வர வேண்டுமென்பதற்காக தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி வெளியிடும் நோக்கத்துடன் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஒன்றை அமைத்தது.
இந்த இயக்ககத்தின் சார்பில் 12 மடலங்களில் அடங்கும் 31 தொகுதிகளும் 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலியாக வெளியிடப் பெற்றுள்ளன. இவை மிக விரிவான முறையில் சொற்களின் வேரும் வரலாறும் காட்டியும், பட விளக்கங்கள், இலக்கண, இலக்கிய, கல்வெட்டு, நாட்டுப்புறச் சொல் விளக்கங்க மேற்கோள்களைக் கொண்டும், திராவிட மொழிகளிலும், உலக மொழிகளிலும் தமிழ்ச் சொற்களின் ஊடாட்டத்தைக் காட்டியும் அரைக்கலைக்களஞ்சிய அமைப்பில் வெளியிடப் பெற்றிருக்கின்றன. இதன் முதல் பகுதி 1985 ஆம் ஆண்டிலும், கடைசித் தொகுதியான 31 ஆம் தொகுதி 2011 ஆம் ஆண்டிலுமாக வெளியிடப் பெற்றது.
தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியை எண்மப்படுத்த (கணனி மயமாக்க) நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. [2]
விருதுகள்[தொகு]
இந்த இயக்ககம் வழியாகக் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.[3]
- தூய தமிழ்ப் பற்றாளர் விருது
- நற்றமிழ்ப் பாவலர் விருது
- தூய தமிழ் ஊடக விருது
- தேவநேயப் பாவாணர் விருது
- வீரமாமுனிவர் விருது
- சொல்லின் தாய் விருது
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக வலைத்தளம்
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட டுவிட்டர் பக்கம்